Skip to main content

Posts

Showing posts from May, 2020

அனுமன் பஞ்சரத்னம்

வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம் ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம் தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம் ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம் ஸஷீம்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம் கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி: தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம் தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம் ஏதத்பவனஸஷீதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம் சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்வதி (ஆதிசங்கரர் அருளியது)

சொர்க்கம், நரகம்

ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.

வைகுண்டவாசப் பெருமாள்

*🔯கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோயில்!* *கர்ப்பவதி கோலத்தில் மேடிட்ட வயிற்றுடன் சீதா தேவியை எங்காவது நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா?* அப்படிப்பட்ட அபூர்வ சீதையின் முன் நின்று, கண் மூடிப் பிரார்த்தனை செய்தாலே குழந்தை வரம் கிட்டும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் தோன்றும். *🔯சீதைக்குப் பிரசவம் நிகழ்ந்த தலம் இதுதான்.* சீதா-ராமனின் குழந்தைகளான லவனும் குசனும் வழிபட்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த வைகுண்ட வாசன் திருக்கோயில். சிவன் கோயில் வடக்குப் பார்த்தபடி இருக்கிறது என்றால், இந்தப் பெருமாள் கோயில் கிழக்குப் பார்த்தபடி 115 அடி நீளத்துடனும் 188 அடி அகலத்துடனும் அழகுற அமைந்திருக்கிறது.  உள்ளே நுழைந்ததும் காணப்படும் தசாவதாரக் காட்சி பரவசப்படுத்துகிறது.  எதிரில் லவ குசர்கள் நீராடிய திருக்குளம்.  குளக்கரை வாசலில் ஆஞ்சநேயர் ஆலயமும் அமைந்துள்ளது. பெருமாள் கோயில்களில் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏதாதசியன்று மட்டும் சொர்க்கவாசல் புறப்பாடு நடக்குமே! அந்த வைகுண்ட வாசன்தான் இந்த ஆலயத்தில் வருடம் பூராவும் பக்தர்கள...

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும். மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம். சுமங்கலி பூஜை எப்படி செய்வது? இல்லத்தை தூய்மைப்படுத்தி, மாக்கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும். சுவாமி படங்களுக்கு பூ, தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும். சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் . நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் . தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் . சந்தனம், குங்குமம், மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி , தீபாராதனை செய்து வழிபட வேண்டும். தனித்தனியாக நமஸ்காரம் செய்து, அவர்களுக்கு புடவை , ரவிக்கை, மஞ்சள், குங்கும சிமிழ், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, ப...

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே... வாழ்வு என்பது, ஒரே ஒரு முறை, இப்பூவுலகில் அன்புடன் நாம் வாழ இறைவன் வழங்கிய அருட்கொடை. ''பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை காய்ப்பதெல்லாம் பழுப்பதில்லை பழுப்பதெல்லாம் பயன்படுவதில்லை வாழும் வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையில்லை''. ஒரு முறை நினைத்து பாருங்கள். நாம் எத்தனை பெரிய பாக்கிய சாலிகள். பலகோடி ரூபாய் கொடுத்தாலும், வடிவமைக்க முடியாத தசைகளால் ஆன கம்ப்யூட்டர் நமது மூளை. ஓய்வே எடுக்க முடியாமல், 24 மணி நேரமும், விழிப்போடு இருக்கும் நம் இதயம். கேமராவை விட காட்சிகளை பல மடங்கு, அற்புதமாக காட்டும் நமது கண்கள் இப்படிப்பட்ட அற்புதமான உடம்பை வெறுமனே படுக்கையில் படுக்க வைக்கலாமா? உழையுங்கள். உழைத்தால் தான் உடம்புக்கும், மனதுக்கும்ஆரோக்கியம். வாழ்க்கையின் சிறப்பு என்ன என்பது, அப்போது தான் தெரியும். காலம் முழுவதும், கல்லாய் கிடக்கவா? மண்ணில் வந்து பிறந்தோம். இருந்த இடத்தில் இருப்பேன். தானாக வந்து விழுந்தால், வாய் திறந்து உண்பேன் என்று, மலைப்பாம்பு நினைக்கலாம். மனிதன் நினைக்கலாமா? செயலற்றுகிடப்பது சாவுக்கு சமம். உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி. யாரையும் ...

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

விவேகானந்தர் உட்பட பல சாதுக்களின் குருவாகவும், மெய்யறிவு பெற்ற ஞானியாகவும் விளங்கியவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் தட்சிணேசுவரத்தில் உள்ள காளி கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த காலம். அப்போது அவ்வாலயத்தின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு இருந்து வந்தார். அவர், பரமஹம்சரைக் கடவுள் அவதாரமாகவே கருதி வணங்கி வந்தார். ஒரு நாள் ராமகிருஷ்ணர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் தன் அறையில் இருந்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே பரமஹம்சரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. நம்பமுடியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தார் மதுர்பாபு. ஆம், அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். மறுகோடிக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. பகவான் ராமகிருஷ்ணர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு அளவிலா ஆச்சரியம் அடைந்தார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது கனவா என்ற சந்தேகம் அவருக்க...

செல்வம் நிலைக்க

தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். 'அணைப்பது' என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும். விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும். ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் க...

விநாயகர் வழிபாடு

*நாம் ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் தெரியும்மா!* நமது மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை,நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.  அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும் நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள் இனி கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.  விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின்...

பூனை குறுக்கே வந்தால் அபசகுணமா?

எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர். பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம். அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள். நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம். பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது. பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவ...

காஞ்சி பெரியவா

*எழுத்தாளர் சுஜாதா காஞ்சி பெரியவரைப் பற்றி கூறியது* பெண்ணுக்கு குங்குமம், ஆணுக்கு விபூதி, திருமண் என்கிற அடையாளங்களை ஒரு பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆக்கி அளித்திருக்கிற அந்த ஆன்மிக நெறிப்பாட்டின் பின்னாலே, ஒரு பெரும் பொருள் இருக்கிறது. இதற்கான விடையை நான் எவ்வளவோ பேரிடம் கேட்டிருக்கிறேன். யாரும் நெற்றியில் தரிக்கும் விபூதிக்கோ, இல்லை திருமண்ணுக்கோ என் நெஞ்சம் நிரம்பும் வண்ணம் ஒரு பதிலைச் சொன்னதில்லை. கண்ணதாசன் மட்டும் தன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஓரளவு சொன்னார். ஒவ்வொரு முறை விபூதியை தரிக்கும் போதும், ஒவ்வொரு இந்துவும், இந்த உடம்பும் ஒருநாள் ‘இந்த விபூதிச் சாம்பல் போல் ஆகப் போகிறது’ என்பதை உணர்ந்து கொள்கிறான். திருமண்ணோ இந்த உடம்பை மண் தின்னப்போகிறது என்று சொல்லாமல் சொல்கிறது. எனவே, ‘நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கை வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அர்த்தமுள்ள செயல்பாடுகளுக்கு ஒதுக்கி அடக்கத்துடனும் ஆரவாரம் இல்லாமலும் வாழ வேண்டும்’ என்று விபூதி, திருமண்ணுக்கு அவர் சொன்ன பொருள் ஏற்புடையதாக இருந்தது. பெரியவரோ, இம்மட்டில் வெகு ஆழமான விளக்கத்தை அளித்திருக்கிறார். அதை நான் அறிய நேர்ந...

பெருமாள் சொத்து

*அஹோபிலம் மடத்தில் அழுத முஸ்லீம் மூதாட்டி!* நேரம் மாலை மணி 5 இருக்கலாம். தஞ்சை ஜில்லா மாயவரம் பக்கத்தில் உள்ள  தேரழுந்தூர் அக்ரஹாரம் , அஹோபில மடத்தின் வாசல் திண்ணையில் நடந்தது இந்த சம்பாஷணை. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் மீதி இருந்த நான்கைந்து பிராமண குடும்பத்தில்  ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை. 600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம், ஒரு காலத்தில் விண்ணைப்பிளக்கும் வேத பாராயணம் விழாக்கள் மற்றும் நான்கு வீதி முழுதும் நிறைந்திருக்கும் பெரிய பெரிய பிராமண அய்யங்கார் வீடுகள்  என்று கல கலப்பாக இருந்தது . இன்று அக்ரஹாரங்கள் முஸ்லிம் மயமாகி மசூதிகளில் பாங்கு சொல்லும் சத்தங்கள் மற்றும் அக்ரஹார திண்ணைகளில் முஸ்லிம் சிறுவர்கள் குரான் ஓதும் சத்தமும் கேட்கிறது ! சில ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தேரழுந்தூரில் ஒரு கிளை கொண்டுள்ளது இந்த அஹோபில மடம் .கருங்கல் மண்டபங்கள் கொண்ட இந்த மடத்தில் ஊரில் உற்சவம் என்றால் மட்டும் மடத்தை சேர்ந்த வைஷ்ணவ அய்யங்கார் வகுப்பை சேர்ந்த மக்கள் கூடுவர். வெளி ஊர்களில் இருந்து அந்த ஊரிலிருந்து சென்று விட்ட...

நன்றி மறப்பது நன்றன்று

இப்பதிவை படிப்பதற்கு சில நிமிடங்கள் செலவழியுங்கள். உங்கள் வாழ்க்கையில் இவைகளை கடைப்பிடித்தால் நீங்கள் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம். 'கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான். அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள். உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள். பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?' கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். 'ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மர...

திருநடனம்

நடனம், நடம், நாட்டியம், நிருத்தம், நாடகம், கூத்து என்னும் சொற்கள் அனைவரும் கேட்டிருப்போம். நடனம், நடம், நாட்டியம், நிருத்தம் என்பன ஒருவரே நிகழ்த்துவது. நாடகம், கூத்து என்பன பலர் கூடி வேடம் அணிந்து நிகழ்த்துவது     நடனம் ஆடுபவரும் நாடகம் நடிப்பவரும் உரையாடலினாலும் பாடலினாலும் நகை, அச்சம், கோபம், வீரம், வியப்பு, சாந்தம் முதலிய குறிப்புகளை முகக் குறிப்பு, கண் குறிப்பு, அங்க அசைவு முதலியவற்றுடன் கூட்டி வெளிப்படுத்துவார்கள். இவை காண்பவரிடத்தும் பற்றிக் கொள்ளும். நடனம் ஆடுபவரும் நாடகம் நடிப்பவரும் நகை, அழுகை முதலியவற்றை வெளிப்படுத்தி அந்த அந்தக் கதை மாந்தர்களாகவே காணப்பட்டாலும் உண்மையில் அவர்கள் அந்தக் கதை மாந்தர்களின் வேறாகவே இருப்பார்கள்.         இது நாம் கண்டு மகிழ்கின்ற நாடகம். நாம் காணாமலே நிகழ்கின்ற நாட்டியம் - நாடகம் - ஒன்று உண்டு. நாடகம் ஆடுபவனை நாம் காண்பதில்லை. ஆனால் நாம் அந்த நாடகத்தில் அகப்பட்டு ஆடுகிறோம். அவன் தன் நாடகத்தால் - நாட்டியத்தால் - நம்மை ஆட்டி வைக்கிறான்.            அவன் யார் ? அவன் தான் இறைவன். அவன் தன...

சக்கர வியூகம்

#அர்ஜுனன்_உடைத்த_சக்கர_வியூகத்தின்_மாபெரும்_கணிதம் சக்கர வியூகத்தின் இரகசியம் சக்கர வியூகத்தில் மிகப்பெரிய கணிதம் ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்துவிடுவதால் இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கும். ஒவ்வொரு அடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும். இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை ...

63 நாயன்மார்கள் வரலாறு

*63 நாயன்மார்கள் வரலாற்று சுருக்கம்...!* 1. திருநீலகண்ட நாயனார்: கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார். 2. இயற்பகை நாயனார்: சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர். 3. இளையான்குடிமாற நாயனார்: நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர். 4. மெய்ப்பொருளார்: தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர். 5. விறல்மிண்டர்: சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர். 6. அமர்நீதியார்: சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர். 7. எறிபத்தர்: சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் ...

வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?* அப்படியென்றால் நீங்கள் அவசியம் திருசெந்தூர் ஆலயத்தில்  தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும். அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா? திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்  மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின்  கொடிமரத்துக்குத்தான் பூஜை நடைபெறும் . இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற சந்தன மரமாகும் இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது. இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா? திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை! முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்ப...

ததாஸ்த்து

மரணம் நம்மை முக்தி அடைய வைக்கும் அதை வாழும் போதே அடைந்து விட்டால் எப்பவும் மகிழ்ச்சியே ஒரு பொருள் வரும் போது துள்ளல் வேண்டாம் நம்மை விட்டு போகும் போதும் துயரமும் வேண்டாம் என்றால் இதுவே முக்தி நிலை ஒரு ரகசியம் உண்டு நாம் மனத்தால் நினைப்பதை பிரபஞ்சம் பொருளாக மாற்றி தரும் பிரபஞ்சத்தில் இல்லை என்ற சொல் இல்லை ஆகையால் நாம் நினைப்பதில் இல்லை என்ற சொல் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம்  "ததாஸ்த்து" என்ற சொல் மட்டுமே பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பு "ததாஸ்து" என்றால் "அப்படியே ஆகட்டும்" என்று பொருள் எதை நினைக்கிறோமோ அதை அப்படியே ஆகட்டும் என்று பிரதிபலிப்பதால் நேர்மறை எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும் உடல் நலம் வேண்டும் என்று கேட்டல் நலம் கிடைக்கும மாறாக நோய் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இல்லை என்ற வார்த்தையை பிரபஞ்சம் எடுத்துக் கொள்ளாது நோய் என்ற சொல்லை மட்டுமே எடுத்துக் கொள்ளும் அதையே நமக்கு பிரதிபலித்தும் கொடுக்கும் ஆக நாம் எண்ணத்தில் கவனமாக நலமே பயக்கும் இதுவே "எண்ணம் போல் வாழ்வு" என்று பெரியோர்கள் கூறி இருக்கிறார்...

திருநீறு

12 ஆண்டுக்கு ஒருமுறை மண் கலயத்தில் தோன்றும் திருநீறு! குளத்தில் மண் கலயத்தில் விபூதி தோன்றும் அதிசய கோவில்!!! சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மை அதிசயக்க வைக்கும் சிவ ஆலயத்தை பற்றி பார்ப்போம்.....! 500 -1000 வருடங்கள் மிக பழமை வாய்ந்த இந்த அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில், மடவிளாகம் என்னும் ஊரில் உள்ளது... பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் 'பச்சோட்டு ஆவுடையார்" என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் 'பச்சோட்டு ஆளுடையார்" என காணப்படுகிறது. தலத்தின் நாயகி 'பச்சை நாயகி", 'பெரியநாயகி" என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள்... திருநீறு மிதந்து வரும் அதிசயம் :- கோவிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. 'நிகபுஷ்கரணி" என்ற பெயர் பெற்ற இச்சுனை கங்கையை போன்று பெருமை பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்...

தியாகராஜர்

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை  மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று  கண் விழித்தார் ! எதிரே ஒரு  வயதான தம்பதி ! அருகே  ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !, மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;.. '' ..ஸ்வாமி ...நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய்  ஷேத்ராடனம்   பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல  தங்கிவிட்டு ,  காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.தயவுசெய்து  ஒத்தாசை  பண்ணணும் !'' கம்மிய  குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின்   அழுக்கு படிந்த உடைகள்  , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் ,  பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் , தெய்வீக அம்சமும்     தியாகராஜரை என்னவோ செய்ய ...அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது  ! ஒரு கணம் நிலை தடுமாறியவர்  பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும்...

திருச்செந்தூரில் வினோத நடைமுறை

1959 ஏப்ரல் மாத பிற்பகுதியில் காஞ்சிப் பெரியவர் சென்னை அருகிலுள்ள வானகரத்தில் தங்கியிருந்தார். அங்கு பெரியவரின் சீடரான சந்திரமவுலி ஸ்ரௌதிகள் உடனிருந்த போது நடந்த சம்பவம் இது. அப்போதைய *தமிழக முதல்வர் காமராஜர்*, பெரியவரைக் காண வந்திருந்தார். அவர் பெரியவரிடம், "சுவாமி! எனது மந்திரி சபையிலுள்ள அறநிலையத்துறை அமைச்சர் திருச்செந்தூர் முருகனைத் தரிசிக்கச் சென்ற போது, அர்ச்சகர் பன்னீர் இலையில் விபூதியை வைத்து அவரிடம் தூக்கிப் போட்டிருக்கிறார். அது அவருக்கு அவமானமாக இருந்ததாக சொல்லி வருத்தப்பட்டார்," என்றார். அதற்குப் பெரியவர், நீங்கள் இதில் வருத்தப்பட ஏதுமில்லை. அப்படி அவர் தூக்கிப் போட்டதற்கு காரணம் இருக்கிறது. ஆதிசங்கரருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. அவர் திருச்செந்தூர் சென்று முருகன் கோவிலுக்குச் சென்று, சுப்ரமணிய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரம் சொல்லி வழிபட்டார். அதில், 'தாரகாசுரனை வதம் செய்த முருகப்பெருமானே! உன் அபிஷேக விபூதியை இலையில் வைத்து போடுவதைக் கண்ட மாத்திரத்தில் பூத, பிரேத, பிசாசுகள் அனைத்தும் ஓடி போய்விடும், "என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தி...

பட்டினத்தார்‌ பாடல்

"நல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக்கே இறைவாகச்சி யேகம்பனே". பாடலின் பொருள்:- அதாவது, நல்லவர்களின் சத்சங்கமும், ஈசனின் பூசையும், அதன் பயனாக நாம் பெறும் ஞானமும்தான் நிலையான பேரின்பமாகும்; மனைவி-மக்களும், சுற்றமும், நம் எழிலுடம்பும் உட்பட மற்றவையெல்லாம் நிரந்தரமற்றவையே என்கிறார் பட்டினத்தார்.

பூஜையறையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

இறையருளை ஈர்க்க பூஜையறையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? வீடு என்பது வெறும் கல்லும், மண்ணும் மட்டுமல்ல அது ஒரு உணர்வு. பல உயிர்கள் உரையுமிடம். எந்தவொரு வீடும் அதன் ஆசியையும், இலட்சணத்தையும் அதன் பூஜை அறையின் மூலமே பெறுகிறது. சிறிய இல்லமாக இருந்தாலும் கூட வெறும் கடவுளின் படத்தை வைத்தே பூஜிக்கும் முறை ஏராளமான இல்லங்களில் உண்டு. ஒரு வீட்டிற்கான ஆசியை அதிகரிக்க செய்வதும், நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் இழுப்பதும் இந்த இடம் தான். எல்லா இந்துக்களின் வீட்டிலும் பூஜை அறை என்பது இன்றியமையாத ஒன்று, தங்கள் விருப்பத்திற்கேற்ப பூஜை அறையை சிறிதாகவோ பெரியதாகவோ வைத்திருப்பார்கள். இதை வெறுமனே பூஜையென முறையின்றி செய்துவிடாமல் சாஸ்திரங்களும், நம் ஆன்மீக சான்றோர்களும் சொல்வதஇ பின்பற்றுகிற போது அதற்குரிய பலன்கள் அபரிமிதமானதாக இருக்கும். பூஜையின் போது அணிய வேண்டிய ஆடைகளை பற்றியும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. துர்கை போன்ற தெய்வங்களை வணங்கும் போது சிவப்பு ஆடைகளும். சிவனை வணங்கும் போது வெண்மை நிற ஆடைகளும், விஷ்ணுவை வணங்கும் போது மஞ்சள் அடையும் அணிவது சிறந்தது. இது மட்டுமின்றி பூஜை அறையில் இருக்க வேண்டிய ...

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்

மோகத்தில் வீழ்ந்துவிட்டால் மொத்தமாய் வீழ்ந்திடுவாய் சாந்தனுவாய்.... சத்தியம் செய்துவிட்டால் சங்கடத்தில் மாட்டிடுவாய் #கங்கை_மைந்தானாய்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் #பாண்டுவாய்.... வஞ்சனை நெஞ்சில் கொண்டால் வாழ்வனைத்தும் வீணாகும் #சகுனியாய்... ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு #குந்தியாய்... குரோதம் கொண்டால் விரோதம் பிறக்கும் #திருதராஷ்டிரனாய்.... பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகளை பாதிக்கும் #கௌரவர்கள்... பேராசை உண்டாக்கும் பெரும் அழிவினையே #துரியோதனனாய்... கூடா நட்பு கேடாய் முடியும் #கர்ணனாய்... சொல்லும் வார்த்தை கொல்லும் ஓர்நாள் #பாஞ்சாலியாய்.. தலைக்கணம் கொண்டால் தர்மமும் தோற்கும் #யுதிஷ்டிரனாய்..... பலம் மட்டுமே பலன் தராது #பீமனாய்.... இருப்பவர் இருந்தால் கிடைப்பதெல்லாம் வெற்றியே #அர்ஜூனனாய்.... சாஸ்திரம் அறிந்தாலும் சமயத்தில் உதவாது #சகாதேவனாய்.. விவேகமில்லா வேகம் வெற்றியை ஈட்டாது #அபிமன்யூ நிதர்சனம் உணர்ந்தவன் நெஞ்சம் கலங்கிடான் #கண்ணனாய்.... வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்.... வாழ்ந்திடலாம்...

குலதெய்வ அருளை பெற

சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் நாயன்மார்கள்  ஆழ்வார்கள் இப்படி யாராவது ஒருவரின் வாரிசுக்களாக திகழும் ஹிந்துக்களே* ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு குலத்திலும் தெய்வ அனுகிரகம் பெற்ற பலர் சித்தர்களாக இருந்து ஜீவ சமாதியாகி இன்று வரை சூட்சுமமாக நமது இனத்தையும் குலத்தையும் காப்பாற்றி வருகின்றனர்* *🐑சித்தர்களின் வாரிசுக்களான* *🐏உங்களுக்காகத்தான்_இந்த_பதிவு..... முழுக்க ஒரு வரி விடாமல் படியுங்கள்!* வள்ளுவர் சொன்னதை போல் புலால் உண்ணுவதை தவிருங்கள். முடியவில்லையெனில் குறைத்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அல்லது ஜட்கா முறையில் வெட்டப்படும் இறைச்சியையாவது கேட்டு வாங்கி உண்ணுங்கள். 🐏🐏ஹலால் என்பது என்ன? 🐑🐏ஹலால் செய்யப்பட்ட அசைவ உணவு என்றால் ஒரு விலங்கை அதன் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து அதன் ரத்தம் முழுக்க வடிந்து அதனை இறக்க விடுவது! 🐏🐏இந்த முறையில் கொல்லப்படும் விலங்கு உடனே சாகாது. அது மரண அவஸ்தையை முழுமையாக அனுபவித்து, துடித்து துடித்து சாகும். 🐏🐏அதற்கு வலி தெரியவேண்டும் என்பதற்காக தண்டுவடத்தை அறுபடாமல் பார்த்துக்கொள்வர். கிராமப் புறங்களில் இதனை ஓதி அறுப்ப...

தெரிந்ததும் தெரியாததும்

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் . 3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது 4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது . 5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது . 6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது 7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது . 8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது . 9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது . #பெண்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது ... 1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும். 2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது) 3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்...

மனதின் இயல்பு

மனதின் இயல்பு என்ன? மனம் போடும் வேடங்களில்தான் மனிதன் ஏமாந்து போகிறான். ஒரு நல்ல புத்தகம் படித்த பிறகோ நல்ல விஷயங்களைக் கேட்ட பிறகோ இனி நானும் புத்தன், காந்தி என்று மனம் சொல்லும். அதைக் கேட்டு நாமும் இருமாந்திருப்போம். ஆனால் நான்கு நாட்கள் கடந்த பிறகு மனம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும். மனிதனின் இந்த நிலையை உட்கருத்தாக வைத்து அழகாகப் பாடியிருக்கிறார் காரைக்கால் அம்மையார்.. திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!... பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள் இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)! அது மதி ஒன்று இல்லா அரா! என்று பாடுகிறார். சிவன் தலையில் பிறை நிலவை சூடியிருக்கிறார். மார்பில் வெண் பன்றிக் கொம்பை அணிந்திருக்கிறார். பிறை நிலவின் ஒளியால் வெண் பன்றிக் கொம்பும் ஒளிர்கிறது. இதை மார்பில் உள்ள பாம்பு பார்க்கிறது. மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒரு நாளும் அந்த பாம்பானது உயர்ந்ததும் சுயமாக ஒளி வீசக்கூடியதுமாகிய நிலவை அறிந்து கொள்ளவே செய்யாது என்கிறார். பாம்பு என்பது ஆசையாகிய காமத்தை உடைய மனதைக் குறிக்கிறது. வெண் பன்றிக் கொம்பு மனதிற்குக்...

குலதெய்வ பெருமை

குலதெய்வங்கள் என்றால் என்ன...? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?  ஒரு பார்வை... குலதெய்வம்... குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது... எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது? நம் முன்னோர்கள்... ...