மனதின் இயல்பு என்ன?
மனம் போடும் வேடங்களில்தான் மனிதன் ஏமாந்து போகிறான்.
ஒரு நல்ல புத்தகம் படித்த பிறகோ நல்ல விஷயங்களைக் கேட்ட பிறகோ இனி நானும் புத்தன், காந்தி என்று மனம் சொல்லும்.
அதைக் கேட்டு நாமும் இருமாந்திருப்போம். ஆனால் நான்கு நாட்கள் கடந்த பிறகு மனம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
மனிதனின் இந்த நிலையை உட்கருத்தாக வைத்து அழகாகப் பாடியிருக்கிறார் காரைக்கால் அம்மையார்..
திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!...
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!
என்று பாடுகிறார்.
சிவன் தலையில் பிறை நிலவை சூடியிருக்கிறார். மார்பில் வெண் பன்றிக் கொம்பை அணிந்திருக்கிறார்.
பிறை நிலவின் ஒளியால் வெண் பன்றிக் கொம்பும் ஒளிர்கிறது. இதை மார்பில் உள்ள பாம்பு பார்க்கிறது.
மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒரு நாளும் அந்த பாம்பானது உயர்ந்ததும் சுயமாக ஒளி வீசக்கூடியதுமாகிய நிலவை அறிந்து கொள்ளவே செய்யாது என்கிறார்.
பாம்பு என்பது ஆசையாகிய காமத்தை உடைய மனதைக் குறிக்கிறது. வெண் பன்றிக் கொம்பு மனதிற்குக் கீழே உள்ள ஐம்புலன்களைக் குறிக்கிறது. பிறை நிலவு என்பது சுயப் பிரகாசமாகிய ஆத்மாவைக் குறிக்கிறது.
புலன்களினால் கிடைக்கக் கூடிய இன்பங்கள் ஆத்மாவின் ஒரு பகுதியே. ஆத்மாவே ஐம்புலன்கள் வாயிலாக பிரகாசித்துக் கொண்டுள்ளது.
உயிர் போய் விட்டால் சுவை தெரியுமா இல்லை வாசம்தான் தெரியுமா?.
மனம் ஐம்புலன்கள் வாயிலாக அனுபவிப்பது அனைத்தும் ஆத்மாவின் பிரகாசமே.
மனதிற்கு மிக உயர்ந்த ஞானமாகிய கருத்துக்கள் சில நேரம் தேவையாக இருக்கிறது. மற்ற சில நேரமோ கீழான ஐம்புலன்களில் இருந்து கிடைக்கும் இன்பமே மிக உயர்ந்ததாகத் தோன்றுகிறது.
ஆனால் சுயமான பிரகாசத்தை உடைய ஆத்மாவின் ஞானமே உயர்ந்தது என்று முடிவு செய்து அதை நோக்கிச் செல்ல என்றுமே மனம் முடிவெடுப்பதில்லை.
மனதின் இந்த இயல்பைப் புரிந்து கொள்வது தான் மனிதனின் வெற்றிப் பாதையின் முதல் படிக்கட்டாக அமைகிறது.
மனம் போடும் வேடங்களில்தான் மனிதன் ஏமாந்து போகிறான்.
ஒரு நல்ல புத்தகம் படித்த பிறகோ நல்ல விஷயங்களைக் கேட்ட பிறகோ இனி நானும் புத்தன், காந்தி என்று மனம் சொல்லும்.
அதைக் கேட்டு நாமும் இருமாந்திருப்போம். ஆனால் நான்கு நாட்கள் கடந்த பிறகு மனம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடும்.
மனிதனின் இந்த நிலையை உட்கருத்தாக வைத்து அழகாகப் பாடியிருக்கிறார் காரைக்கால் அம்மையார்..
திருமார்பில் ஏனச் செழு மருப்பைப் பார்க்கும்!...
பெருமான் பிறைக் கொழுந்தை நோக்கும்! - ஒருநாள்
இது மதி என்று ஒன்றாகத் தேறா(து)!
அது மதி ஒன்று இல்லா அரா!
என்று பாடுகிறார்.
சிவன் தலையில் பிறை நிலவை சூடியிருக்கிறார். மார்பில் வெண் பன்றிக் கொம்பை அணிந்திருக்கிறார்.
பிறை நிலவின் ஒளியால் வெண் பன்றிக் கொம்பும் ஒளிர்கிறது. இதை மார்பில் உள்ள பாம்பு பார்க்கிறது.
மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒரு நாளும் அந்த பாம்பானது உயர்ந்ததும் சுயமாக ஒளி வீசக்கூடியதுமாகிய நிலவை அறிந்து கொள்ளவே செய்யாது என்கிறார்.
பாம்பு என்பது ஆசையாகிய காமத்தை உடைய மனதைக் குறிக்கிறது. வெண் பன்றிக் கொம்பு மனதிற்குக் கீழே உள்ள ஐம்புலன்களைக் குறிக்கிறது. பிறை நிலவு என்பது சுயப் பிரகாசமாகிய ஆத்மாவைக் குறிக்கிறது.
புலன்களினால் கிடைக்கக் கூடிய இன்பங்கள் ஆத்மாவின் ஒரு பகுதியே. ஆத்மாவே ஐம்புலன்கள் வாயிலாக பிரகாசித்துக் கொண்டுள்ளது.
உயிர் போய் விட்டால் சுவை தெரியுமா இல்லை வாசம்தான் தெரியுமா?.
மனம் ஐம்புலன்கள் வாயிலாக அனுபவிப்பது அனைத்தும் ஆத்மாவின் பிரகாசமே.
மனதிற்கு மிக உயர்ந்த ஞானமாகிய கருத்துக்கள் சில நேரம் தேவையாக இருக்கிறது. மற்ற சில நேரமோ கீழான ஐம்புலன்களில் இருந்து கிடைக்கும் இன்பமே மிக உயர்ந்ததாகத் தோன்றுகிறது.
ஆனால் சுயமான பிரகாசத்தை உடைய ஆத்மாவின் ஞானமே உயர்ந்தது என்று முடிவு செய்து அதை நோக்கிச் செல்ல என்றுமே மனம் முடிவெடுப்பதில்லை.
மனதின் இந்த இயல்பைப் புரிந்து கொள்வது தான் மனிதனின் வெற்றிப் பாதையின் முதல் படிக்கட்டாக அமைகிறது.
Comments
Post a Comment