மோகத்தில் வீழ்ந்துவிட்டால் மொத்தமாய் வீழ்ந்திடுவாய் சாந்தனுவாய்....
சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
#கங்கை_மைந்தானாய்..
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
#பாண்டுவாய்....
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
#சகுனியாய்...
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
#குந்தியாய்...
குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
#திருதராஷ்டிரனாய்....
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
#கௌரவர்கள்...
பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
#துரியோதனனாய்...
கூடா நட்பு
கேடாய் முடியும்
#கர்ணனாய்...
சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
#பாஞ்சாலியாய்..
தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
#யுதிஷ்டிரனாய்.....
பலம் மட்டுமே
பலன் தராது
#பீமனாய்....
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
#அர்ஜூனனாய்....
சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
#சகாதேவனாய்..
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
#அபிமன்யூ
நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
#கண்ணனாய்....
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம்...
சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
#கங்கை_மைந்தானாய்..
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
#பாண்டுவாய்....
வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
#சகுனியாய்...
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
#குந்தியாய்...
குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
#திருதராஷ்டிரனாய்....
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
#கௌரவர்கள்...
பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
#துரியோதனனாய்...
கூடா நட்பு
கேடாய் முடியும்
#கர்ணனாய்...
சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
#பாஞ்சாலியாய்..
தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
#யுதிஷ்டிரனாய்.....
பலம் மட்டுமே
பலன் தராது
#பீமனாய்....
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
#அர்ஜூனனாய்....
சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
#சகாதேவனாய்..
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
#அபிமன்யூ
நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
#கண்ணனாய்....
வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம்...
Comments
Post a Comment