இறையருளை ஈர்க்க பூஜையறையை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?
வீடு என்பது வெறும் கல்லும், மண்ணும் மட்டுமல்ல அது ஒரு உணர்வு. பல உயிர்கள் உரையுமிடம். எந்தவொரு வீடும் அதன் ஆசியையும், இலட்சணத்தையும் அதன் பூஜை அறையின் மூலமே பெறுகிறது. சிறிய இல்லமாக இருந்தாலும் கூட வெறும் கடவுளின் படத்தை வைத்தே பூஜிக்கும் முறை ஏராளமான இல்லங்களில் உண்டு.
ஒரு வீட்டிற்கான ஆசியை அதிகரிக்க செய்வதும், நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் இழுப்பதும் இந்த இடம் தான். எல்லா இந்துக்களின் வீட்டிலும் பூஜை அறை என்பது இன்றியமையாத ஒன்று, தங்கள் விருப்பத்திற்கேற்ப பூஜை அறையை சிறிதாகவோ பெரியதாகவோ வைத்திருப்பார்கள்.
இதை வெறுமனே பூஜையென முறையின்றி செய்துவிடாமல் சாஸ்திரங்களும், நம் ஆன்மீக சான்றோர்களும் சொல்வதஇ பின்பற்றுகிற போது அதற்குரிய பலன்கள் அபரிமிதமானதாக இருக்கும். பூஜையின் போது அணிய வேண்டிய ஆடைகளை பற்றியும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. துர்கை போன்ற தெய்வங்களை வணங்கும் போது சிவப்பு ஆடைகளும். சிவனை வணங்கும் போது வெண்மை நிற ஆடைகளும், விஷ்ணுவை வணங்கும் போது மஞ்சள் அடையும் அணிவது சிறந்தது.
இது மட்டுமின்றி பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதையும் சாஸ்திரங்கள் சொல்கின்றனர், பூஜை அறையில் பூஜையின் போது அது எந்த தெய்வங்களாக இருப்பினும் அரிசி நெய்வைத்யம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
ஏனென்றால் அரிசி இறைவனின் உணவாக கருதப்படுகிறது. அரிசியை தவிர்த்து ஏலக்காயும் வெற்றிலையும் மிக அவசியமாக பூஜை அறையில் வைக்க வேண்டியவைகள். பூஜையில் ஏற்றப்படும் விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்காமல் ஸ்திரமாக எறிவது நல்ல சகுனத்தை தெரிவிப்பதாக அமையும். மலர்கள் தண்ணீர் மற்றும் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது இந்த மூன்றும் பூஜையின் மிக முக்கியமான அம்சங்கள்.
எந்த திசையிலும் வைத்து வணங்கிவிடலாமா? எந்த புறத்திலும் இருந்து பூஜை செய்து விடலாமா என்றால் இல்லை. அதற்கென முறைகள் உண்டு, நாம் அமர்ந்து பூஜை செய்யும் ஆசனமும் மிக புனிதமானதாக கருத வேண்டும் அதை அங்கும் இங்கும் மாற்றி வைக்க கூடாது அதை கால்களால் தள்ள கூடாது. மேலும் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றும் போது வீட்டின் வாஸ்து தோஷங்கள் மறையும் என்பது ஐதீகம்.
சில பூஜை அறைகளில் எண்ணிக்கையில் அதிகமான படங்களை வைத்திருபார்கள், ஆனால் படங்கள் சிறிதே ஆனாலும் முறையாக பூஜைகள் செய்கிற போது அந்த இடத்தினுடைய ஆற்றல் பெருகி நாம் வேண்டுவது கிடைக்க கூடிய சாத்தியங்களை அதிகரிக்கும் என்பது நம்பிகை.
வீடு என்பது வெறும் கல்லும், மண்ணும் மட்டுமல்ல அது ஒரு உணர்வு. பல உயிர்கள் உரையுமிடம். எந்தவொரு வீடும் அதன் ஆசியையும், இலட்சணத்தையும் அதன் பூஜை அறையின் மூலமே பெறுகிறது. சிறிய இல்லமாக இருந்தாலும் கூட வெறும் கடவுளின் படத்தை வைத்தே பூஜிக்கும் முறை ஏராளமான இல்லங்களில் உண்டு.
ஒரு வீட்டிற்கான ஆசியை அதிகரிக்க செய்வதும், நேர்மறை அதிர்வுகளை வீட்டிற்குள் இழுப்பதும் இந்த இடம் தான். எல்லா இந்துக்களின் வீட்டிலும் பூஜை அறை என்பது இன்றியமையாத ஒன்று, தங்கள் விருப்பத்திற்கேற்ப பூஜை அறையை சிறிதாகவோ பெரியதாகவோ வைத்திருப்பார்கள்.
இதை வெறுமனே பூஜையென முறையின்றி செய்துவிடாமல் சாஸ்திரங்களும், நம் ஆன்மீக சான்றோர்களும் சொல்வதஇ பின்பற்றுகிற போது அதற்குரிய பலன்கள் அபரிமிதமானதாக இருக்கும். பூஜையின் போது அணிய வேண்டிய ஆடைகளை பற்றியும் சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. துர்கை போன்ற தெய்வங்களை வணங்கும் போது சிவப்பு ஆடைகளும். சிவனை வணங்கும் போது வெண்மை நிற ஆடைகளும், விஷ்ணுவை வணங்கும் போது மஞ்சள் அடையும் அணிவது சிறந்தது.
இது மட்டுமின்றி பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதையும் சாஸ்திரங்கள் சொல்கின்றனர், பூஜை அறையில் பூஜையின் போது அது எந்த தெய்வங்களாக இருப்பினும் அரிசி நெய்வைத்யம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.
ஏனென்றால் அரிசி இறைவனின் உணவாக கருதப்படுகிறது. அரிசியை தவிர்த்து ஏலக்காயும் வெற்றிலையும் மிக அவசியமாக பூஜை அறையில் வைக்க வேண்டியவைகள். பூஜையில் ஏற்றப்படும் விளக்கு காற்றில் அசைந்து ஆடிக்கொண்டிருக்காமல் ஸ்திரமாக எறிவது நல்ல சகுனத்தை தெரிவிப்பதாக அமையும். மலர்கள் தண்ணீர் மற்றும் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது இந்த மூன்றும் பூஜையின் மிக முக்கியமான அம்சங்கள்.
எந்த திசையிலும் வைத்து வணங்கிவிடலாமா? எந்த புறத்திலும் இருந்து பூஜை செய்து விடலாமா என்றால் இல்லை. அதற்கென முறைகள் உண்டு, நாம் அமர்ந்து பூஜை செய்யும் ஆசனமும் மிக புனிதமானதாக கருத வேண்டும் அதை அங்கும் இங்கும் மாற்றி வைக்க கூடாது அதை கால்களால் தள்ள கூடாது. மேலும் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றும் போது வீட்டின் வாஸ்து தோஷங்கள் மறையும் என்பது ஐதீகம்.
சில பூஜை அறைகளில் எண்ணிக்கையில் அதிகமான படங்களை வைத்திருபார்கள், ஆனால் படங்கள் சிறிதே ஆனாலும் முறையாக பூஜைகள் செய்கிற போது அந்த இடத்தினுடைய ஆற்றல் பெருகி நாம் வேண்டுவது கிடைக்க கூடிய சாத்தியங்களை அதிகரிக்கும் என்பது நம்பிகை.
Comments
Post a Comment