Skip to main content

அரிசி

உங்கள் வீட்டு சமையலறையில், அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் இப்படி எடுக்கவே கூடாது. உண்ணும் உணவிற்கே கஷ்டம் வந்துவிடும்.!!*

ஒரு வீட்டிற்கு வாஸ்து என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு நம் வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை அந்தந்த இடத்தில் முறையாக வைப்பதும் அவசியம். முக்கியமான சில பொருட்களை சரியான இடத்தில் வைத்து விட்டாலே பிரச்சனையில் பாதி முடிந்து விடும். அந்த வரிசையில் சமையலறையில் அரிசியை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், அந்த அரிசியை தினம்தோறும் சமைப்பதற்காக எப்படி எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பேர் வீட்டில் அரிசியை மூட்டையாக வாங்கி வைப்பார்கள். சில பேர் வீட்டில் மூட்டையில் இருக்கும் அரிசியை ட்ரம்மில் கொட்டியும் வைத்து உபயோகப்படுத்துவார்கள். சிலபேர் அரிசி மூட்டையை சமையலறையில் வைக்காமல், பொருட்களை சேகரித்து வைக்கும் ஸ்டோர் ரூமில் வைத்திருப்பார்கள். சில பேர் அரிசியை அலமாரிகளில் வைத்திருப்பார்கள். இதில் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் அரிசியை வைத்திருந்தாலும், தரைப்பகுதியில் தான் அந்த அரிசியை வைக்க வேண்டும். உயரமான இடத்தில் வைக்கக்கூடாது. கையை தூக்கி, உயரத்தில் இருந்து அரிசியை எப்போதுமே எடுக்கக்கூடாது.

குறிப்பிட்டு சொல்லப்போனால் தினம்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் அரிசியை சின்ன டப்பாவில் போட்டு, சமையல் அடுப்பு திண்ணைக்கு கீழே வைத்துக் கொள்வது நல்ல பலனை தரும். அதாவது அண்ண லட்சுமியை, நாம் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் தலைவணங்கி, தலைகுனிந்து நமஸ்காரம் செய்து எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் அரிசி மூட்டையை அடுப்புக்கு கீழ் உள்ள இடத்தில் வைத்து வந்தார்கள். ஒவ்வொரு முறையும் குனிந்து அரிசியை எடுப்பது நமஸ்காரம் செய்வதற்கு சமம்.

ஸ்மார்ட் கிச்சன், ஷெல்ஃப், ரேக் என்று நம்முடைய நாகரீகம் வளர வளர சிலபேர் இந்த அரிசி வைக்கும் இடத்தையும் மாற்றிவிட்டார்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் தலைக்கு மேல் உள்ள அலமாரியில் அரிசியை வைக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் எல்லாம் ‘குதிர்’ என்று அரிசி சேமிக்கும் பானையில் அரிசியை கொட்டி வைத்திருப்பார்கள். உயரமான அந்தப் குதிரிலும், கீழ் பக்கத்தில்தான் கதவு இருக்கும். குனிந்து அந்தக் கதவைத் திறந்தால், அதனுள்ளே கையை விட்டு அரிசியை எடுத்துக் கொள்ளலாம்.

அரிசியை வைப்பதற்கு என்றும், எடுப்பதற்கு என்றும் இருக்கும் முறையை முடிந்தவரை கடைபிடிக்க பாருங்கள்! வீட்டில் தன தானியத்திற்கு எந்த ஒரு பஞ்சமும் ஏற்படாது என்ற தைரியத்தோடு நாம் வாழ்க்கையை நடத்தலாம்.

அடுத்ததாக சிலரது வீட்டில் அரிசியை அளப்பதற்கு டம்ளர் வைத்திருப்பார்கள். முடிந்தவரை ஆழாக்கு என்று சொல்லப்படும் ஒரு பொருளை, அரிசி அளக்க பயன்படுத்துவது மிகவும் நல்லது. அந்த ஆழாக்கில் எப்போதுமே 4 அரிசி இருக்க வேண்டும். காலியாக வைக்க கூடாது. அந்த ஆழாக்கு எப்போதுமே அரிசி மூட்டையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆழாக்காக இருந்தாலும் சரி. மரைக்கா என்று சொல்லப்படும் படியாக, இருந்தாலும் சரி. ஏதாவது ஒன்று அரிசியை அளப்பதற்கு மூட்டையிலோ அல்லது ட்ரமிலோ கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம். அரிசியை அளக்காமல் எடுத்து, உலை பானையில் போடவே கூடாது.

*யார் சொல்லி யார்தான் கேட்பது? கணவன் சொல்ல, மனைவி கேட்பதில்லை. மனைவி சொல்வதை கணவன் கேட்பதில்லை. மாமியார் சொல்லி மருமகள் கேட்பதில்லை. மருமகள் சொல்வதை மாமியார் கேட்பதில்லை. இப்படி, ஒருவர் சொல்லை, ஒருவர் ஏன் கேட்க வேண்டும்? எதற்கு கேட்க வேண்டும்? என்று விதண்டாவாதம் பேசிப்பேசியே, எதையுமே நம் காதுகளில் கேட்காமல் விட்டு விட்டோமோ எண்ணமோ? இன்று நம்முடைய நிலைமை மாறி, சூழ்நிலை மாறி, சந்தோஷம் மாறி, கஷ்டத்தில் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இனிமேலாவது  முன்னோர்கள் சொல்லும் பழக்கத்தை கேட்டு நடந்து தான் பார்ப்போமே...

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...