Skip to main content

அருளூறு அமுதச் செந்தமிழ்

அருளூறு அமுதச் செந்தமிழ் மொழியிலுள்ள இந்து வேதத்தை,அன்றாடப் பூசை மொழிகளை 48 முறை ஏன் அன்றாடம் ஓதவேண்டும்?

ஓதினால் மனிதவாழ்வுக்குத் தேவையான அருளுலக,பொருளுலக செல்வங்கள் கிடைக்குமா?

(ஓம் ஞானாச்சாரியார் சித்தர் அரசயோகிக்
கருவூறார் அருளியது.)

அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் தங்களுடைய தாய்மொழியும்,அண்டபேரண்ட
ஆட்சிமொழியுமான,அருளூறு
செந்தமிழ் மொழியில் அருளியுள்ள
இந்துவேதத்தின் அன்றாடப் பூசைமொழியில்
 உள்ள எழுத்துக்களும், சொற்களும், சொற்றொடர்களும்,48முறை
 உரத்த குரலில் ஓதப்பட்டு எழுப்பப்படுகின்ற ஓலி அலைகள் தான் பிண்டத்தை மற்ற
பிண்டங்களோடும் பேரண்டங்களோடும் அண்டபேரண்டங்களோடும்
இணைத்துப் பிணைக்கிறது.
இதே போல் இந்த  இந்து வேத ஓலி
அலைகள் தான் ஓவ்வொரு மனிதனுடைய முற்பிறப்பு, மறுபிறப்பு,
இப்பிறப்பு ஆகிய மூன்றையும் இணைத்துப் பிணைத்து, நல்லவை,
அல்லவைகளைக் கூட்டிக் கழித்து
நிகழ்கால நடைமுறை வாழ்வுக்குரிய
பொருளை விளக்குகின்றன.

இதே போல் இந்த இந்து வேத ஓலி
அலைகள் தான்  இறைவன் அல்லது
கடவுள் என்பதையும்,மனிதனுடைய
உயிரையும், மனிதனுடைய சொந்த பந்தப் பற்றுக்களால்  உருவாகும்
பாசம் என்பதையும் இணைத்து
மனிதனுக்குக் தேவையான
அருளுலக வாழ்வுக்குரிய பக்குவங்களை விளைவித்துத் தருகின்றன.

இதனை விளக்கமாக கூறிட வேண்டுமென்றால், இந்து வேதத்தின்
எழுத்து ,சொல், சொற்றொடர், எனும்
மூன்றும் உரத்தகுரலில் ஓதப்பட்டு
எழுப்பப்படும் ஓலி அலைகளால் தான்
மனித வாழ்வுக்குத் தேவையான
பத்தி,சத்தி, சித்தி, முத்தி எனும்
நான்கும் படிப்படியாகக் கிடைக்கின்றன.
ஓம்திருச்சிற்றம்பலம் ஓம்

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...