Skip to main content

ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம்

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம்

கண்கலங்க வைக்கும் அனுக்ரஹம்]

அந்த முதியவருக்கு, முதுமை, உடல் தளர்ச்சி, துணை இல்லாமல் வெளியே போகமுடியாது. துணை என்ன? ஒரு வாய் ஜலம் குடுக்கக் கூட ஆளில்லை!

பெரியவாளின் நினைவே அவருக்கு மருந்து, உதவி எல்லாம்!

ஆட்டோ, டாக்ஸியில் போக வஸதியும் கிடையாது. ஆனால், அந்த பரம ஏழையான முதியவருக்கு எப்போதும் மனஸ் அடித்துக்கொள்ளும்....

.."அவன்" வர்றதுக்குள்ள, "அவாளை" பாத்துடணும்"......

எவன் வருவதற்குள், எவாளைப் பாத்துடணும்?......

"காலன்" வருவதற்குள் "கால காலனான பெரியவாளை" பார்த்துவிட வேண்டும் !"

இந்த தாபம்... நாளுக்கு நாள் அவர் மனஸில் வளர்ந்ததே தவிர, அது பகல் கனவாகவே இருந்தது.

திடீரென்று ஒருநாள், அவர் வீட்டு வாஸலில் ஏதோ நிழலாடியது.

"காலனோ? அப்பனே! நா..... இன்னும் ஒன்னை தர்ஶனம் பண்ணலியேப்பா! என் ஜன்மா கடைத்தேறணுமே!..."

கண்களைக் கூராக்கி.... "யாரு?" .....என்றார்.

"நாங்க காஞ்சி ஶ்ரீமடத்துலேர்ந்து வரோம் தாத்தா....! ஒங்கள... அழைச்சிண்டு வரச்சொல்லி.... பெரியவா உத்தரவு....."

"காலன் இல்லை! காலஸம்ஹாரமூர்த்தியான பெரியவான்னா.... தூதாளை அனுப்பியிருக்கா!..."

வயோதிகரின் மேனி மட்டுமில்லை, உள்ளிருக்கும் ஆத்மாவே சிலிர்த்தது!

"நா... எனக்குள்ள பேசிண்டது, தவிச்சது, பெரியவாளுக்கு தெரியாதா? அப்பா! க்ருபாளு! நா.... என்ன பெரிய பண்டிதனா? அக்னிஹோத்ரியா? அமைச்சரா? அரஸியல் தலைவரா? எப்பவோ.... தர்ஶனம் பண்ணினப்போ... ஒரு தேங்காயை ஸமர்ப்பிச்சுட்டு, ஒரு நமஸ்காரம் பண்ணினப்போ, இனிமே அத்தனையும் பெரியவாதான்-னு மனஸுல பிடிச்சிண்டது. அவ்ளவ்தான்! அதுக்கு இத்தன... க்ருபையா!"

கண்களில் ஆறாக பெருகும் கண்ணீரை துடைத்து மாளவில்லை...!

ஶ்ரீ மடத்திலிருந்து வந்தவரும், இந்த எளிய பக்தியைக் கண்டு கண்கலங்கினர்.

"மெதுவா.... என் தோளை பிடிச்சிண்டு நடந்து வந்து, கார்ல ஏறிக்கோங்கோ"

பாரிஷதர் சொன்னார்.

இருவரும் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தபோது, பெரியவா காமாக்ஷி கோயிலில் இருந்தார்.
கோவில் வாஸலிலேயே காரை நிறுத்தினார்கள்.

" தாத்தா.... அம்பாளை தர்ஶனம் பண்ணிட்டு போலாமா?"

"இல்லப்பா..... மொதல்ல பெரியவா தர்ஶனம்....! அப்றமா .........."

இதோ! புன்னகையோடு இவருக்காகவே காத்திருக்கும் காஷாயஜோதி......

பெரியவா திருமுன் போய் நின்றார்.

பேச்சே வரவில்லை....

கண்ணீர் பெருக்கெடுத்தது. எத்தனை காலம் தபஸ் பண்ணியிருக்கிறார்!

தாபம்தானே தபஸ்!

இதோ! அவருடைய தபஸ்ஸுக்கு, பகவான் ப்ரத்யக்ஷமாகிவிட்டான்!

பெரியவாளும் எதுவுமே பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த இடத்தில் ஏதோ விவரிக்க முடியாத பரவஸமான சூழ்நிலை பரவியது.

ஒரு வழியாக ஸமாளித்துக்கொண்டு பெரியவாளின் பாதகமலங்களுக்கு நமஸ்காரம் பண்ணினார்...

அவருடைய உடல் பல முறை குலுங்கியது.

ஐந்து நிமிஷமாயிற்று............

பத்மபாதங்களில் விழுந்து நமஸ்கரித்தவர், எழுந்திருக்கவேயில்லை!

சுற்றி இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பெரியவாளைப் பார்த்தனர்.
ஒருவர், அவரைத் தூக்கலாம் என்று வந்தார்....

பெரியவா, "வேண்டாம்!" என்று ஸமிக்ஞை செய்துவிட்டு, தன்னுடைய ஒரு காஷாய வஸ்த்ரத்தை எடுத்துக் கொடுத்தார்.....

" அவர் மேல போத்தி விடு"

அவருடைய 'ம்ருதஶரீர'த்தின் மேல் போர்த்த சொன்னார்.

அதற்கும் மேலாக பெரியவாளின் பெருங்கருணை ஒரே பெருக்காக பெருகி,

" இவரோட... தஹன ஸம்ஸ்காரத்தையும் நீங்களே பண்ணிடுங்கோடா..."

ஶ்ரீ மடத்து பணியாளர்களே இறுதி சடங்கு பண்ணும்படி ஆனது.

"மொதல்ல பெரியவா...... அப்றமா......."

பெரியவாளின் தர்ஶனம், அவருக்கு அப்புறமாக இனி எதுவுமே இல்லாமல், எந்த தாயின் கர்ப்பத்திலும் வராதபடி, ஸாக்ஷாத் பெரியவாளிடமிருந்து... இனி பிரியாதபடி கலந்திருக்கும், பரம பாக்யத்தை கொடுத்துவிட்டது!

என்ன பாக்யம்! மஹாமாதாவின் ஶரணகமலங்களில் முக்தி கிடைக்க, அந்த தாத்தா பண்ணின தபஸ் என்ன?

‘இனிமே அத்தனையும் பெரியவாதான்!’ என்று பேச்சளவில் இல்லாமல், மனஸில் ஸத்யமாக, ஆழமாகப் பிடித்துக் கொண்டு, ஸதா தாபத்தோடு "பெரியவா! பெரியவா!" என்று ஏங்கியது மட்டுமே!

ஶ்ரீ ஆசார்யாள் பாததூளி 🙏
உம்மாச்சி தாத்தா சரணம்🙏🏻

ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர
காஞ்சி சங்கர
காமாக்ஷி சங்கர
காமகோடி சங்கர

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...