Skip to main content

மூன்றாம் பிறை

🌜மூன்றாம் பிறையை வெறுமனே பார்த்தால் உடனே பலன்கள், சக்திகள் வந்திடுமா?🌛

🌙எந்தப் பொருளையும் கண்களால் பார்த்திடில் *உள்ளம், மனம், உடல், உயிர் நாளங்களில் எண்ண எழுச்சிகள், மனமாற்றங்கள், உணர்ச்சிகள், காமம், குரோதம், லோபம், மதமாச்சர்யம், கோப உணர்ச்சிகள்* தோன்றுகின்றன அல்லவா!

🌙காமம், ஆசைகள், பேராசைகள், முறையற்ற உணர்வுகளுக்கும் கண்கள் பார்க்கும் போது எழும் மனப் பிரதிபலிப்புகளே காரணமாகின்றன.

🌙அதாவது கண்கள் எதைப் பார்க்கின்றனவோ, அவற்றின் தன்மைகளைப் பொறுத்து, பல மாற்றங்கள் உடல், மனம், உள்ளத்தில் ஏற்படுகின்றன.

🌙ஆலயத்தில் கடவுள் தரிசனம் என்றால் கண்களால் பார்ப்பது தானே. பிறகு தாமே மனம், உள்ளத்தில் இறை ஈடுபாடுகள் எழுகின்றன. இதிலும் பக்தி உணர்ச்சிகள், நல்லெண்ணங்கள் எழுகின்றன அல்லவா.

🌙இதைப் போலத்தான் *மூன்றாம் பிறை என்பது உடல், மனம், உள்ளத்தில் நம் நினைவாற்றல் கூடும் வடிவில் எண்ணற்ற நல்மாற்றங்களை* ஏற்படுத்துகின்றது.

🌙ஆம், *கண்கள் பார்க்கும் போது மனம், உடல், உள்ளத்தில் நன்மையான அம்சங்களை மட்டுமே தோற்றுவிக்க வல்ல மூல தெய்வீக சாதனங்களுள் ஒன்றே மூன்றாம் பிறை* தரிசனமாகும்.

🌙எனவே இனியேனும் வாழ்வில் தவறாது உங்கள் பிள்ளளைகள், பெண்கள், பேரக் குழந்தைகளுக்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்றுத் தாருங்கள்.

🌙இது நல்வித்துக்களை விதைத்து நல்வரங்களைப் பெற்றுத் தருவதாகும்.

🌜ஒவ்வொரு மூன்றாம் பிறையும் *அந்தந்த நாளின் நட்சத்திர,யோக, கரண கால நிலைகளுக்கு ஏற்ப, பல அற்புதமான நல்வரங்களைத் தருகின்றது*. “வெறும் மூன்றாம் பிறைத் தரிசனம்தானே அப்படி என்ன அது விசேஷமான சக்திகளைத் தந்து விடப் போகின்றது?” - என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.🌛

🌙முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தெய்வ மூர்த்தியரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை

*ஸ்ரீசந்திர சூட சிவ தரிசனமாக, ஸ்ரீசந்திர மௌலீஸ்வர தரிசனமாக, ஸ்ரீசந்திர சேகர தரிசனமாகவும்*
- போற்றி வழிபடுவதால்,

🌙நாம் தேவாதி, தேவ, தெய்வாதியருடன் இணைந்து, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெறுகின்றோம் என்ற உத்தம பாக்ய நிலையின் மகத்துவத்தை  உணர்ந்திடுவோம்

🌙மனதைச் சுத்திகரிக்கும் தரிசனம்.

🌙மனதால் செய்த பாவங்களுக்கு நல்ல விமோசனம் தரும் தரிசனம்.

🌙குறிப்பாக, வாயால் பேசிய தீய வார்த்தைகளுக்கும், மனதால் பேசிய கொடிய வார்த்தைகளுக்கும், மனதில் உருவாகும், விகாரமான கேவலமான எண்ணங்களுக்கும் தக்க பிராயச் சித்தத்தைத் தரக் கூடிய தரிசனம்.

🌙சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கமான நற்குணத்தைத் தர வல்ல தரிசனம்.

🌙வேத மந்திரங்களை ஓத முடியவில்லையே என்று ஏங்கி வருந்துவோர்க்கு வேத மந்திரப் பலாபலன்களைத் தர வல்ல தரிசனம்.

🌙வெளியில் சொல்ல இயலாதபடி விகாரமான எண்ணங்களில் உழல்வோருக்கு, மனசுத்தியைப் பெற உதவும் பரிகாரங்களைத் தரும் தரிசனம்.

🌙இவ்வாறாக, வானில் சில நிமிடங்களே தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், மனவளப் பலன்களை அபரிமிதமாகத் தர வல்லதாம்.

🌙உண்மையில் *மனம் அமுத ஒளி நதியில் புண்ணியமயமாகப் புனித நீராடுவதாகவே, சித்தர்கள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பாங்கினைக் குறிக்கின்றனர்*.

🌛ஒரு மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே தரிசிக்க வல்ல மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், நம் உடலில் எத்தனையோ விதமான நல்நாள மாற்றங்களை ஏற்படுத்துகின்றன🌛

 🌙 ஈஸ்வரன் தன் சிரசில் சூடியிருக்கும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன வடிவாகத் துலங்குவதால், *ஆத்மப் பிரகாச ஈஸ்வர ஜோதியானது (சிவம்), ஆத்மப் பிரகாசம் கொண்ட இருதயப் பிறையுடன் ஆத்மக் கிரண சங்கமம்* கொள்வதால், மூன்றாம் பிறைச் சந்திர தசனம் மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டதாகும்.

🌙மூன்றாம் பிறை வானில் தெரிகின்ற போது, *நன்கு நிமிர்ந்து நின்று, பின்காலை உயர்த்தி, மூலபாத யோக நிலையில் நின்று* மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று,

💢
“சந்திர சேகர சந்திர சேகர சந்திர சேகர பாஹிமாம்

சந்திர சேகர சந்திர சேகர சந்திர சேகர ரட்சமாம்”
💢

- என்று 36 முறை ஓதி,

🌙தன்னையே 10 முறையேனும் ஆத்மப் பிரதட்சிணமாக வலம் வருதல் வேண்டும்.

💢
“ஒன்றுள் ஒன்றியே ஒன்றில் ஒன்றாகி
ஒன்றென ஓதியே மூன்றில் ஒன்றாகி
ஒன்றில் ஒன்றிய ஒன்றுடையான்தனை
ஒன்றி ஒன்றுவோம் மூன்றில் ஒன்றாய்!”
💢
- என்று *சந்திர சக்தித் துதிகளை* ஓதுதல் மிகவும் விசேஷமானதாகும்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...