நெல்லி மரத்துக்கும் செல்வத்துக்கும்
என்ன சம்மந்தம்....?
உலத்திலேயே பணக்கார கடவுள் யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனால் பணம் வேண்டுமென்றால்
குபேரனைத்தான்
வழிபடுவோம்
குபேரன் மாதிரி
பணக்காரணாக
வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்.ஆனால் அந்த குபேரனுக்கே
பணத்தட்டுப்பாடு
வந்தபோது என்ன.செய்தார் தெரியுமா?
போர் ஏற்ப்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடமிருந்த செல்வம் அனைத்தையும் இழந்து விட்டார் குபேரன்.செல்வத்துக்கு அதிபதியான
குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை
இழந்து தவித்த போது சிவபெருமானிடம்
சென்று முறையிட்டார்.
"நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.
செல்வத்துக்கும்
நெல்லிமரத்துக்கும்
என்ன சம்பந்தம்
என்று யோசித்த
குபேரன் சிவபெருமானின்
கட்டளை என்பதால்
எதுவும் பேசாமல்
ஆயிரக்கணக்கான
நெல்லி மரங்களை
வளர்த்தார்.
நெல்லி மரங்கள்
பராமரிப்பிலும் குறை வைக்கவில்லை.
ஏனெனில் சிவபெருமானின்
ஆணை ஆயிற்றே
நாள்கள் கடந்து விட்டன.நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன.காய் காய்த்து காய்களெல்லாம்
இனித்தன.
குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிற்று.சூழ்ச்சி
செய்து செல்வம்
பறித்த வளங்கள் எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம்
கொடுத்தார்கள்
இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன
குபேரனைவிட
பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத்
தொடங்கினார்கள்
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம்.
மீண்டும் சிவபெருமானிடம்
சென்றார்.
"நெல்லி மரங்கள் வளர்ந்ததா?இழந்த செல்வம் கிடைத்ததா"? என்றார் சிவபெருமான்.
"நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த
காரியத்தைப் புரிந்துக் கொள்ள
முடியவில்லையே"
என்றார் குபேரர்.
"நீ வைத்தவை நெல்லி மரங்கள்
அல்ல லட்சுமிதேவி
உரிய முறையில்
அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த
பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின்
அருளைப் பெற்றாய்" என்று
சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை சொல்லலானார்
மேலும்"ஒருநாள் தேவலோகத்தில்
இந்திரன் அமுதத்தை உண்ணும்போது
அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம்.அதிலிருந்து முளைத்து உண்டானதுதான்.
நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள்"
என்றார்.
மகாலட்சுமியின்
சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து தினசரி
நீர் ஊற்றி லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்...!
என்ன சம்மந்தம்....?
உலத்திலேயே பணக்கார கடவுள் யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனால் பணம் வேண்டுமென்றால்
குபேரனைத்தான்
வழிபடுவோம்
குபேரன் மாதிரி
பணக்காரணாக
வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்.ஆனால் அந்த குபேரனுக்கே
பணத்தட்டுப்பாடு
வந்தபோது என்ன.செய்தார் தெரியுமா?
போர் ஏற்ப்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடமிருந்த செல்வம் அனைத்தையும் இழந்து விட்டார் குபேரன்.செல்வத்துக்கு அதிபதியான
குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை
இழந்து தவித்த போது சிவபெருமானிடம்
சென்று முறையிட்டார்.
"நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.
செல்வத்துக்கும்
நெல்லிமரத்துக்கும்
என்ன சம்பந்தம்
என்று யோசித்த
குபேரன் சிவபெருமானின்
கட்டளை என்பதால்
எதுவும் பேசாமல்
ஆயிரக்கணக்கான
நெல்லி மரங்களை
வளர்த்தார்.
நெல்லி மரங்கள்
பராமரிப்பிலும் குறை வைக்கவில்லை.
ஏனெனில் சிவபெருமானின்
ஆணை ஆயிற்றே
நாள்கள் கடந்து விட்டன.நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன.காய் காய்த்து காய்களெல்லாம்
இனித்தன.
குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிற்று.சூழ்ச்சி
செய்து செல்வம்
பறித்த வளங்கள் எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம்
கொடுத்தார்கள்
இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன
குபேரனைவிட
பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத்
தொடங்கினார்கள்
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம்.
மீண்டும் சிவபெருமானிடம்
சென்றார்.
"நெல்லி மரங்கள் வளர்ந்ததா?இழந்த செல்வம் கிடைத்ததா"? என்றார் சிவபெருமான்.
"நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த
காரியத்தைப் புரிந்துக் கொள்ள
முடியவில்லையே"
என்றார் குபேரர்.
"நீ வைத்தவை நெல்லி மரங்கள்
அல்ல லட்சுமிதேவி
உரிய முறையில்
அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த
பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின்
அருளைப் பெற்றாய்" என்று
சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை சொல்லலானார்
மேலும்"ஒருநாள் தேவலோகத்தில்
இந்திரன் அமுதத்தை உண்ணும்போது
அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம்.அதிலிருந்து முளைத்து உண்டானதுதான்.
நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள்"
என்றார்.
மகாலட்சுமியின்
சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து தினசரி
நீர் ஊற்றி லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்...!
Comments
Post a Comment