பாலுக்குள்ளே நெய் இருப்பது போல மனிதனுக்குள்ளே ஞானம் இருக்கிறது.
புளித்த பால் தயிராகிறது.
அதை சுழற்றி அடித்துக் கடைந்தால் வெண்ணெய் வெளிப்படுகிறது.
அதை நெருப்பில் உருக்கினால் நெய் கிடைக்கிறது.
இது அனுபவத்தின் வெளிப்பாடு.
உலகாயப் பொருள்களின் மீதுள்ள பற்று மனிதனை நெய் என்கிற ஞானத்தை அடையும் படிக்கு பக்குவப்படுத்துகிறது.
இது இயல்பு நிலை. ஆனால், மற்றவர்களுடைய அனுபவங்களை உற்றுப் பார்த்து தன்னை நெறிப்படுத்திக் கொள்ளும் பேரறிவாளர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் உலகாயத்தின் பற்றுகளின் விளைவுகளை உணர்ந்து அதிலிருந்து விலகும் போது புத்தி கூர்மையுள்ள அவர்களுக்கு கடையப்படுவதற்கு தயிர் சித்தமாக இருக்கிறது.
தெய்வீக வாழ்க்கை அவர்களுக்கு உண்மை என்கிற அமுதத்தைத் திரட்டித் தருகின்றது.
முன்னது துன்பத்தில் உழன்றுப் பக்குவப்படுவது.
பின்னது பூரண இன்பத்தையும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், நிரந்தர திருப்தியையும் பெற்றுத் தருகிறது.
உலகியல் எண்ணங்கள் மனதில் உள்ள வரை துன்பங்கள் தொடர்கதைதான். ஏனென்றால் அவர்களின் மனமானது சிதறிக் கிடக்கிறது. அதன் ஆற்றல்கள் பலவேறு திசைகளில் வீண்டிக்கப்படுகின்றன.
ஆனால், தெய்வீக எண்ணங்கள் நிரம்பிய மனதிற்கு இன்பமென்றும், துன்பமென்றும் பேதமில்லை.
அது எல்லாவற்றையும் அனுபவமாக ஏற்றுக் கொண்டு, அந்த அனுபவங்களையே படிகளாக்கி மேலேறிப் போய்க் கொண்டேயிருக்கும்.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். உருக்கப்பட்ட உலோகத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால், அது எப்படி அந்தப் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுகிறதோ, அதுபோல, மனம் எதில் நிறைந்திருக்கிறதோ அதன் வடிவத்தைப் பெற்று விளைவுகளை அடைகிறது.
மனிதனின் எண்ணம் செயலாகிறது. செயல் பழக்கமாகிறது. பழக்கம் இயல்பு அல்லது குணமாக ஆகிறது. இயல்பு விளைவுகளைத் தருகிறது.
இப்போது முடிவு உங்கள் கைகளில். உங்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
அது உங்கள் சுதந்திரம். அதன் விளைவுகளும், அனுபவங்களும் உங்களுக்குரியதே.
இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார். அவர் சுவாமிகளை நமஸ்கரித்து விட்டு, '' ஐயா நீங்கள் பெரிய மகாத்மா.
எல்லாவற்றையும் துறந்த ஞானி. உங்களைப் போன்ற துறவிகள் தற்காலத்தில் யாரும் இல்லை. எனவே என்னை ஆசிர்வதித்து அருள வேண்டும்'' என்று பணிந்து நின்றார்.
இராமகிருஷ்ணர் அவரைக் கூர்ந்து பார்த்து விட்டு, நான் துறவியல்ல. நீயே துறவி. நான் எதையும் துறக்கவில்லை. நீதான் துறந்திருக்கிறாய் என்றார்.
அந்த மனிதர் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஸ்வாமி என்னை பரிகாசம் செய்கிறீர்கள்.
நான் மீளாத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறேன். எந்த ஆசையும் என்னை விட்டு நீங்கவில்லை. என்னிடம் ஆயிரக்கணக்கான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அதனால்தான் நான் உங்களையே நாடி வந்திருக்கிறேன்.
இப்படியிருக்க நான் எப்படித் துறவியாவேன் ? என்று கேட்டார்.
பரமஹம்சர் சிரித்தபடி நான் சொல்வது உண்மைதான். எனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றது.
உனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கிறது. அவை என்னவென்றால், கடவுளும், உலகமுமே.
நான் கடவுளைத் தேர்வு செய்தேன். நீயோ, உலகத்தைத் தேர்வு செய்தாய். கடவுளை அடைவதே மனிதப் பிறப்பின் நோக்கம், அதுவே இயல்பு. எனவே நான் அதன்படி நடக்கின்றேன்.
நான் எதையும் விரும்பவும் இல்லை, துறக்கவும் இல்லை.
ஆனால், நீயோ அழகான, கவர்ச்சிமிக்க, பல கோடி மக்கள் விரும்பும் உலகத்தைத் தேர்ந்தெடுத்தாய். உண்மையில் அது அர்த்தமற்றது.
எனவே நீதான் அர்த்தமுள்ள, நம் இயல்பான விஷயத்தைத் துறந்து அர்த்தமற்ற, துன்பத்திற்குக் காரணமான உலகத்தைத் தேர்வு செய்திருக்கிறாய்.
எனவே நீதான் துறவி என்றார். மேலும், ஒரு வைரமும், கல்லும் பக்கம் பக்கம் இருக்க, நீயோ கல்லைத் தேர்ந்தெடுத்தாய். நானோ வைரத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்.
எனவே வைரத்தையே துறந்த நீதான் துறவி. நானல்ல, ஏனென்றால் நான் மதிப்பு மிக்க வைரத்தையல்லவா தேர்ந்தெடுத்துள்ளேன்.
ஆசை என்கிற விஷயத்தைப் பொருத்த வரை நாம் இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம்.
ஆனால், இலக்குதான் வேறு என்பதைப் புரிந்து கொள் என்றார்.
அந்த மனிதர் வாய் பேச முடியாமல் மௌனமாக நின்றார்.
அப்போது பரமஹம்சர் உன்னைக் குற்றப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை, உன்னை மேன்மைப்படுத்தவே சொன்னேன் என்றார்.
மகான்களின் பார்வையின் கோணமே, பரிமாணமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஞானிகள்.
எனவே உலக வாழ்க்கை என்பது சிற்றின்பங்களும் அதன் விளவுகளாகத் துன்பங்களும் நிறைந்தது.
ஆன்மிக வாழ்வு என்பதோ ஒரு ஆனந்தமான அனுபவம்.
உண்மையில் கரைந்து போகத் துடிக்கும் நம் ஆன்மாவின் இயல்பு.
புளித்த பால் தயிராகிறது.
அதை சுழற்றி அடித்துக் கடைந்தால் வெண்ணெய் வெளிப்படுகிறது.
அதை நெருப்பில் உருக்கினால் நெய் கிடைக்கிறது.
இது அனுபவத்தின் வெளிப்பாடு.
உலகாயப் பொருள்களின் மீதுள்ள பற்று மனிதனை நெய் என்கிற ஞானத்தை அடையும் படிக்கு பக்குவப்படுத்துகிறது.
இது இயல்பு நிலை. ஆனால், மற்றவர்களுடைய அனுபவங்களை உற்றுப் பார்த்து தன்னை நெறிப்படுத்திக் கொள்ளும் பேரறிவாளர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் உலகாயத்தின் பற்றுகளின் விளைவுகளை உணர்ந்து அதிலிருந்து விலகும் போது புத்தி கூர்மையுள்ள அவர்களுக்கு கடையப்படுவதற்கு தயிர் சித்தமாக இருக்கிறது.
தெய்வீக வாழ்க்கை அவர்களுக்கு உண்மை என்கிற அமுதத்தைத் திரட்டித் தருகின்றது.
முன்னது துன்பத்தில் உழன்றுப் பக்குவப்படுவது.
பின்னது பூரண இன்பத்தையும், துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், நிரந்தர திருப்தியையும் பெற்றுத் தருகிறது.
உலகியல் எண்ணங்கள் மனதில் உள்ள வரை துன்பங்கள் தொடர்கதைதான். ஏனென்றால் அவர்களின் மனமானது சிதறிக் கிடக்கிறது. அதன் ஆற்றல்கள் பலவேறு திசைகளில் வீண்டிக்கப்படுகின்றன.
ஆனால், தெய்வீக எண்ணங்கள் நிரம்பிய மனதிற்கு இன்பமென்றும், துன்பமென்றும் பேதமில்லை.
அது எல்லாவற்றையும் அனுபவமாக ஏற்றுக் கொண்டு, அந்த அனுபவங்களையே படிகளாக்கி மேலேறிப் போய்க் கொண்டேயிருக்கும்.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு இதுதான். உருக்கப்பட்ட உலோகத்தை ஒரு பாத்திரத்தில் ஊற்றினால், அது எப்படி அந்தப் பாத்திரத்தின் வடிவத்தைப் பெறுகிறதோ, அதுபோல, மனம் எதில் நிறைந்திருக்கிறதோ அதன் வடிவத்தைப் பெற்று விளைவுகளை அடைகிறது.
மனிதனின் எண்ணம் செயலாகிறது. செயல் பழக்கமாகிறது. பழக்கம் இயல்பு அல்லது குணமாக ஆகிறது. இயல்பு விளைவுகளைத் தருகிறது.
இப்போது முடிவு உங்கள் கைகளில். உங்களுக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
அது உங்கள் சுதந்திரம். அதன் விளைவுகளும், அனுபவங்களும் உங்களுக்குரியதே.
இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார். அவர் சுவாமிகளை நமஸ்கரித்து விட்டு, '' ஐயா நீங்கள் பெரிய மகாத்மா.
எல்லாவற்றையும் துறந்த ஞானி. உங்களைப் போன்ற துறவிகள் தற்காலத்தில் யாரும் இல்லை. எனவே என்னை ஆசிர்வதித்து அருள வேண்டும்'' என்று பணிந்து நின்றார்.
இராமகிருஷ்ணர் அவரைக் கூர்ந்து பார்த்து விட்டு, நான் துறவியல்ல. நீயே துறவி. நான் எதையும் துறக்கவில்லை. நீதான் துறந்திருக்கிறாய் என்றார்.
அந்த மனிதர் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஸ்வாமி என்னை பரிகாசம் செய்கிறீர்கள்.
நான் மீளாத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கிறேன். எந்த ஆசையும் என்னை விட்டு நீங்கவில்லை. என்னிடம் ஆயிரக்கணக்கான ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. அதனால்தான் நான் உங்களையே நாடி வந்திருக்கிறேன்.
இப்படியிருக்க நான் எப்படித் துறவியாவேன் ? என்று கேட்டார்.
பரமஹம்சர் சிரித்தபடி நான் சொல்வது உண்மைதான். எனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றது.
உனக்கு முன்பும் இரண்டு சாத்தியங்கள் இருக்கிறது. அவை என்னவென்றால், கடவுளும், உலகமுமே.
நான் கடவுளைத் தேர்வு செய்தேன். நீயோ, உலகத்தைத் தேர்வு செய்தாய். கடவுளை அடைவதே மனிதப் பிறப்பின் நோக்கம், அதுவே இயல்பு. எனவே நான் அதன்படி நடக்கின்றேன்.
நான் எதையும் விரும்பவும் இல்லை, துறக்கவும் இல்லை.
ஆனால், நீயோ அழகான, கவர்ச்சிமிக்க, பல கோடி மக்கள் விரும்பும் உலகத்தைத் தேர்ந்தெடுத்தாய். உண்மையில் அது அர்த்தமற்றது.
எனவே நீதான் அர்த்தமுள்ள, நம் இயல்பான விஷயத்தைத் துறந்து அர்த்தமற்ற, துன்பத்திற்குக் காரணமான உலகத்தைத் தேர்வு செய்திருக்கிறாய்.
எனவே நீதான் துறவி என்றார். மேலும், ஒரு வைரமும், கல்லும் பக்கம் பக்கம் இருக்க, நீயோ கல்லைத் தேர்ந்தெடுத்தாய். நானோ வைரத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்.
எனவே வைரத்தையே துறந்த நீதான் துறவி. நானல்ல, ஏனென்றால் நான் மதிப்பு மிக்க வைரத்தையல்லவா தேர்ந்தெடுத்துள்ளேன்.
ஆசை என்கிற விஷயத்தைப் பொருத்த வரை நாம் இருவரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம்.
ஆனால், இலக்குதான் வேறு என்பதைப் புரிந்து கொள் என்றார்.
அந்த மனிதர் வாய் பேச முடியாமல் மௌனமாக நின்றார்.
அப்போது பரமஹம்சர் உன்னைக் குற்றப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை, உன்னை மேன்மைப்படுத்தவே சொன்னேன் என்றார்.
மகான்களின் பார்வையின் கோணமே, பரிமாணமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஞானிகள்.
எனவே உலக வாழ்க்கை என்பது சிற்றின்பங்களும் அதன் விளவுகளாகத் துன்பங்களும் நிறைந்தது.
ஆன்மிக வாழ்வு என்பதோ ஒரு ஆனந்தமான அனுபவம்.
உண்மையில் கரைந்து போகத் துடிக்கும் நம் ஆன்மாவின் இயல்பு.
Comments
Post a Comment