Skip to main content

பெண்கள் செய்யக்கூடாத மூன்று தவறுகள்

**
 இந்த_தவறுகளை_திருத்திக்_கொண்டால்_கணவர்_கொடுத்த_காசை_சுலபமாக_சேமித்து_விடலாம்.

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி கலாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், அது பெண்கள் கையில்தான் உள்ளது. பெண்கள் தங்களுடைய வீட்டை எப்படி பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துதான் அந்த வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வாள். மேற்கண்ட விஷயங்கள் எல்லாம் கிட்டத்தட்ட நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ‘என்னுடைய வீட்டை நான் எப்போதும் சுத்தமாகத்தான் வைத்து இருக்கின்றேன்’! இருந்தாலும் வீட்டில் சேமிப்பு தங்கவே இல்லையே! அது ஏன்? இந்த கேள்வி உங்கள் மனதிலும் எழுகிறதா?

சில பேரது வீட்டில் சேமிப்பு தங்காமல் இருப்பதற்கு அந்த வீட்டுப் பெண்கள் செய்யும் தவறு தான் காரணமாக இருக்குமே தவிர, மற்றபடி பெரிய பிரச்சினைகள் எதுவுமே இருக்காது.  வீட்டில் அந்தப்பெண் அறியாமல் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன தவறுகளை கூட திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. அது என்ன தவறு, என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு திருத்திக் கொள்ளலாமா!

ஒரு வீட்டில் பெண்கள் கோவிலாக மதிக்கக்கூடிய இடம் பூஜை அறை என்றால், மற்றொன்று இடம் சமையல் அறையாக இருக்க வேண்டும். எந்த வீட்டில் ஒரு பெண், சமையல் அறையை, பூஜை அறையாக நினைத்து சுத்தபத்தமாக வைத்துக் கொள்கிறாளோ அந்த வீட்டில் லட்சுமி நிச்சயம் தங்குவாள். இரவு நேரத்தில் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களையும், மிச்சம் மீதி உள்ள பண்டங்களையும் முறையாக எடுத்து வைக்காமல் கண்டபடி போட்டு விட்டு உறங்கச் செல்லக்கூடாது.

மறுநாள் காலை எழுந்ததும், சமையலறையை சுத்தம் செய்யாமல் சமையலை தொடங்கக்கூடாது. காலை அவசர வேலை காரணமாக விரைவாக சமைக்க வேண்டும் என்றால், முடிந்தவரை இரவு நேரத்தில் சமையலறையை சுத்தம் செய்து வைத்துவிட்டு தூங்குவதே மிகவும் சிறப்பு.

'இரவு நேரத்தில் நாம் சமையல் அறையை சுத்தம் செய்கின்றேன். எச்சில் பாத்திரத்தை முறையாகத்தான் எடுத்து வைக்கின்றேன்.’ இருந்தும் என் வீட்டில் பணம் தங்கவில்லை. இப்படிப்பட்டவர்கள் செய்யும் ஒரு தவறு, காலை சமயலறைக்கு சென்ற உடன் அடுப்பை பற்ற வைப்பது தான். அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பு, கட்டாயம் துணி கொண்டு துடைக்க வேண்டும். உங்களது அடுப்பு ஏற்கனவே சுத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை அந்த கேஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன்பாக ஒரு முறை துணி கொண்டு துடைத்து விட்டு, அக்னி பகவானை ஒருமுறை மனதார வேண்டிக்கொண்டு உங்களது அடுப்பை பற்ற வைத்தால் உங்கள் கையில் சேமிப்பை அதிகரிக்கும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அடுப்பை வானம் பார்க்க வைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அடுப்பின் மேல் வெறுமனே ஏதாவது ஒரு பாத்திரத்தை வைப்பது மிகவும் நல்லது. அந்த காலத்தில் எல்லாம் விரகடுப்பில் சமைப்பார்கள் அல்லவா? சமைத்த அடுப்பு சூடாக இருக்கும்போது, பூனை வந்து அமர கூடாது என்பதற்காக அதன் மேல் ஒரு பாத்திரத்தை வைத்துள்ளார்கள். அதாவது ஓட்டு வீட்டுக்குள் பூனை வந்துபோகும் நடமாட்டம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம் வீட்டிற்குள் பூனை வராது என்றாலும், நம் வீட்டில் இருப்பது கேஸ் அடுப்பாக இருந்தாலும், இந்த பழக்கத்தை நம் வீட்டில் கடைபிடித்தால் நன்மைதான்.

இரண்டாவதாக பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயம், அவர்களது காலில் போட்டு வைத்திருக்கும் மெட்டி. கல்யாணமான போது போட்டிருப்பார்கள்! ஐந்து, ஆறு வருடம் கழிந்து இருக்கும். ஆனால் மெட்டியை மாற்றாமல் அந்த பழைய மெட்டியை அணிந்திருப்பார்கள். அதாவது தேய்ந்த மெட்டியை பெண்கள் காலில் அணிந்து கொள்ளக் கூடாது. அது தரித்திரத்தை தேடித்தரும். முடிந்தவரை அதை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது மாற்றுவது நல்லது. அதைப் பார்க்கும் போதே நமக்கு நன்றாக தெரியும். மெட்டி தேய்ந்திருக்கிறதா, இல்லையா? என்று. தேய்ந்து இருந்தால், உடனே அதை கொடுத்துவிட்டு புதிய மெட்டியை வாங்கி அணிந்து கொள்வது நல்லது. நம்முடைய முன்னோர்கள் கால் கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள விரலில் மட்டும் தான் மெட்டி அணிய வேண்டும் என்று சாஸ்திரப்படி சொல்லியுள்ளார்கள். ஆகையால் மெட்டி போட்டு இருக்கும் விரலுக்கு அடுத்த விரல், அதற்கு அடுத்த விரல் என்று மூன்று விரல்களில் மெட்டி அணிவதை தவிர்ப்பது நல்லது.

அடுத்ததாக வீட்டில் பெண்கள் தலைக்கு வைப்பதற்காக பூவை வாங்கினால், உங்களது கணவர் உங்களுக்காக பூவை வாங்கி கொண்டு வந்து தந்தாலும், அந்த பூவை தலையில் வைப்பதற்கு முன்பு அந்த பூவில் இருந்து கொஞ்சம் பூவை காமாட்சி அம்மன் விளக்கிற்க்கு வைப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது குடும்பத்திற்கு நிரந்தர லட்சுமி கடாட்சத்தை தேடித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆக இந்த சின்ன சின்ன தவறுகளை அழறியாமல் இதுநாள்வரை செய்திருந்தால் இனி அதை திருத்திக் கொண்டு உங்களுடைய வீட்டில் இருக்கும் தரித்திரத்தை துரத்தியடித்து சேமிப்பை சுலபமாக சேர்த்து விட முடியும்.

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...