Skip to main content

அப்பாவி கண்ணன்

மடியில் தலைவைத்துக் கொண்டிருந்த கண்ணனின் முதுகைத் தடவிக்கொண்டே.
கண்ணா..
என்று யசோதை கூப்பிட, கண்ணன் எச்சரிக்கையானான்.

அம்மா...
என்னடா..
நீங்களும் தினமும் ஒரு புகாரை விசாரிக்கறீங்க. நான் எதுவும் பண்ணல.. இந்த மாமியெல்லாம்தான் நான் அவங்க வீட்டுக்கு வரணும்னு ஆசைப்பட்டு கூப்பிடறாங்கன்னு சொன்னா நம்பமாட்டேங்கறீங்க..

அவங்க கிடக்கறாங்க..
நான் உன்னைத்தாண்டா நம்பறேன்..

சரிமா..
நான் வேணா நாளைக்கு முழு நாளும் வெளிலயே போகாம உங்ககூடவே இருக்கேன். என்ன நடக்கறதுன்னு பாக்கறீங்களா..

ம்ம்.. சரி. தூங்கு..

மறுநாள் காலை முதல் கண்ணன் வெகு சமர்த்தாக அம்மாவுடனேயே பேசிக்கொண்டு, அவளுக்கு சிற்சிறு உதவிகள் செய்துகொண்டு அவள் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான்.

உச்சி வேளையானதும் ஒரு கோபி வந்தாள். அவளைக் கண்டதும் கண்ணன் ஒளிந்துகொண்டான்.

என்னம்மா.. யசோதை கேட்க..
பருப்பு தீர்ந்துடுச்சு.. அதான் வாங்கிண்டு போலாம்னு வந்தேன். என்று சொன்னவளின் கண் வீடு முழுவதும் தேடியது. யசோதை ஒரு படி பருப்பைக் கொண்டுவந்து கொடுத்தாலும் அவள் போகாமல் தயங்கியபடி நிற்க, இன்னொருத்தி வந்தாள்.

அம்மா கொஞ்சம் வெல்லம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க..

அவளுக்கு வேண்டியதைக் கொடுப்பதற்குள் இரண்டு கோபிகள் வந்தனர்.

உங்களுக்கென்னம்மா வேணும்?

நீங்கதான் மாவு இடிக்கணும். நாலுபேர் முடிஞ்சா வாங்கன்னு சொல்லி அனுப்பினீங்களாம்.

ம்ம்க்கும்.. நான் போன வாரம் சொன்னேன். நாலுபேர் வந்து இடிச்சுக் கொடுத்துட்டுப் போனாங்களே..

ஒவ்வொருவராய்‌ வர ஆரம்பித்தனர். சற்று நேரத்தில் கோகுலத்திலிருந்த அத்தனை கோபிகளும் வந்துவிட, யசோதை ஒரு வாறு யூகித்துவிட்டாள்.

ஒரு கோபி, தைரியமாகக் கேட்டேவிட்டாள்.

அம்மா. கண்ணனுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா.. இல்லன்னா அவங்கப்பாகூட  எங்கயாவது கோவிலுக்குப்  போயிருக்கானா..

கலகலவென்று சிரித்தாள் யசோதா.

ஓ.. எல்லாரும் அவனைத்தேடித்தான் வந்தீங்களா..

அனைவரின் தலையும் கவிழ,
என்னமோ, அவன்தான் வந்து அதைப் பண்ணினான் இதைப் பண்ணினான்னு புகார் சொல்வீங்க..
இப்ப என்ன ஆச்சு.
கேட்டுக்கொண்டே
கண்ணா என்று உள்ளே பார்த்துக் கூப்பிட்டாள்.

அம்மா.. என்று ஓடி வந்த கண்ணன் யசோதையின் புடைவைத் தலைப்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

எல்லாரும் ஒன்னா வந்தா என்ன பண்றது? குழந்தைக்கு வேத்துமுகம்.. அதான்.. என்றபடி அவனை இழுத்து மடியில் வைத்துக் கொண்டாள். அன்றைக்கு எல்லாருக்கும் அங்கேயே உணவு ஏற்பாடாயிற்று.

நாளை திருட வருகிறேன் என்பதை வெட்கம் எனும் பெயரில் சூட்சுமமாய் உணர்த்தினான் கண்ணன்.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்...

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...