36 திருப்பாண்டிப் பதிகம்
*திருப்பெருந்துறையில் அருளியது*
இறைவனைப் பாண்டி நாட்டுத் தலைவனாக வைத்துப் பாடி அருளுதலின் திருப்பாண்டிப்பதிகம் எனப்பட்டது. இதனுள் இறைவன் குதிரை மேல் வந்து அருள் செய்தமை கூறப்படுகின்றது.
*சிவானந்த விளைவு*
அஃதாவது, சுகப்பேறு. இப்பேறு இறைவன் திருவிளையாட்டை எண்ணி மகிழ்வதால் உண்டாவதாம்.
*கட்டளைக்கலித்துறை*
*திருச்சிற்றம்பலம்*
*பாடல் 10*
கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால்
வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால்
ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே;
தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.
*பதப்பொருள் :*
கூற்றை வென்று - இயமனை வென்று, ஆங்கு - அவ்வாறே, ஐவர் கோக்களையும் வென்று இருந்து - ஐம்புலன்களாகிய அரசரையும் அடக்கிக்கொண்டு, பெருந்தேவியும் தானும் - பெரிய சத்தியும் தானுமாக, அழகாய் வீற்றிருந்தான் - அழகாய் எழுந்தருளியிருந்தானாகிய இறைவன், ஓர் மீனவன்பால் -ஒப்பற்ற பாண்டிய மன்னனுக்காக, ஏற்று வந்தார் உயிர் - எதிர்த்து வந்தவர்களது உயிரை, உண்ட - வாங்கின, திறல் - வலிமையுள்ள, ஒற்றைச்சேவகள் - ஓர் வீரனாயினான்; ஆகையால், தேற்ற மிலாதவர் - தெளிவில்லாதவர்கள், சேவடி - அவனது சிவந்த திருவடியை, சிக்கெனச் சேர்மின்கள் - உறுதியாகச் சென்று பற்றிக்கொள்ளுங்கள்.
*விளக்கம் :*
ஐவர் கோக்களை வென்றது, காமனை வென்றதைக் குறித்தது. பெருந்தேவியும் தானுமாக வீற்றிருந்தது, திருவாஞ்சியத்தில் அம்மையப்பராகச் சீர் பெற இருந்ததாம். 'சேவகன்' என்றதற்குப் பின், 'ஆயினான்' என்பது வருவித்துரைக்க நின்றது. காஞ்சியில் வாழ்ந்த சமண மன்னனால் அனுப்பபட்ட யானையை ஒற்றைச் சேவகனாக நின்று பாண்டியனுக்காக அழித்த வரலாறு ஒற்றைச் சேவகனாகியதாம். இதனைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க.
"திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்"
என்ற கீர்த்தித்திருவகவல் அடிகளையும் காண்க.
இதனால், இறைவனது திருவருளைத் தெளிதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
*திருப்பெருந்துறையில் அருளியது*
இறைவனைப் பாண்டி நாட்டுத் தலைவனாக வைத்துப் பாடி அருளுதலின் திருப்பாண்டிப்பதிகம் எனப்பட்டது. இதனுள் இறைவன் குதிரை மேல் வந்து அருள் செய்தமை கூறப்படுகின்றது.
*சிவானந்த விளைவு*
அஃதாவது, சுகப்பேறு. இப்பேறு இறைவன் திருவிளையாட்டை எண்ணி மகிழ்வதால் உண்டாவதாம்.
*கட்டளைக்கலித்துறை*
*திருச்சிற்றம்பலம்*
*பாடல் 10*
கூற்றை வென்று, ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து, அழகால்
வீற்றிருந்தான், பெரும் தேவியும், தானும் ஒர் மீனவன்பால்
ஏற்று வந்து, ஆர் உயிர் உண்ட, திறல் ஒற்றைச் சேவகனே;
தேற்றம் இலாதவர்! சேவடி சிக்கெனச் சேர்மின்களே.
*பதப்பொருள் :*
கூற்றை வென்று - இயமனை வென்று, ஆங்கு - அவ்வாறே, ஐவர் கோக்களையும் வென்று இருந்து - ஐம்புலன்களாகிய அரசரையும் அடக்கிக்கொண்டு, பெருந்தேவியும் தானும் - பெரிய சத்தியும் தானுமாக, அழகாய் வீற்றிருந்தான் - அழகாய் எழுந்தருளியிருந்தானாகிய இறைவன், ஓர் மீனவன்பால் -ஒப்பற்ற பாண்டிய மன்னனுக்காக, ஏற்று வந்தார் உயிர் - எதிர்த்து வந்தவர்களது உயிரை, உண்ட - வாங்கின, திறல் - வலிமையுள்ள, ஒற்றைச்சேவகள் - ஓர் வீரனாயினான்; ஆகையால், தேற்ற மிலாதவர் - தெளிவில்லாதவர்கள், சேவடி - அவனது சிவந்த திருவடியை, சிக்கெனச் சேர்மின்கள் - உறுதியாகச் சென்று பற்றிக்கொள்ளுங்கள்.
*விளக்கம் :*
ஐவர் கோக்களை வென்றது, காமனை வென்றதைக் குறித்தது. பெருந்தேவியும் தானுமாக வீற்றிருந்தது, திருவாஞ்சியத்தில் அம்மையப்பராகச் சீர் பெற இருந்ததாம். 'சேவகன்' என்றதற்குப் பின், 'ஆயினான்' என்பது வருவித்துரைக்க நின்றது. காஞ்சியில் வாழ்ந்த சமண மன்னனால் அனுப்பபட்ட யானையை ஒற்றைச் சேவகனாக நின்று பாண்டியனுக்காக அழித்த வரலாறு ஒற்றைச் சேவகனாகியதாம். இதனைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க.
"திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
சேவக னாகித் திண்சிலை யேந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்"
என்ற கீர்த்தித்திருவகவல் அடிகளையும் காண்க.
இதனால், இறைவனது திருவருளைத் தெளிதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
Comments
Post a Comment