சிவனே என இருந்திட ஆசை ... !
சிவன் மட்டும் சிந்தையில்
நிறைந்திட ஆசை ... !
செய்த பாவ மெல்லாம்
தொலைத்திட ஆசை ... ! பரமனின் திருவடி பற்றிட ஆசை ..
நல்லவை யெல்லாம்
நடந்திட ஆசை ... !
நான் வணங்கும் காட்சியெல்லாம் நீயாக ஆசை ... !
உன் நிழலாக என்றென்றும்
நான் மாற ஆசை ... !
சினம் தவிர்த்த மன நிலையை
நான் அடைய ஆசை ... !
தினம் போற்றும் உன் சிறந்த
பக்தனாக ஆசை ... !
மனம் நினைக்கும் செயல் யாவும்
சிறந்தோங்க ஆசை ... !
அந்த செயலும் பிறர் நன்மைக் கென்றால் அடைவேன் பேராசை ... ! தா னென்ற அகந்தை யெல்லாம்
விட்டொழிக்க ஆசை ... ! உன்
அடியவன் என்ற கர்வம் மட்டும்
நிறைந்திருக்க ஆசை ... !
பசி தாகம் பிணி யெல்லாம்
விட்டொழிக்க ஆசை ... !
தாயு மானவா உன் கரத்தால்
அமிழ்து உண்ண ஆசை ... !
எடுத்த இப் பிறவிக்கு போதும்
இந்த ஆசை ... ! இந்த வரம் தனையே தந்தெனக்கு அருள் புரிவாய் சிவனே ... !
ஓம் நமச் சிவாயவே...
சிவன் மட்டும் சிந்தையில்
நிறைந்திட ஆசை ... !
செய்த பாவ மெல்லாம்
தொலைத்திட ஆசை ... ! பரமனின் திருவடி பற்றிட ஆசை ..
நல்லவை யெல்லாம்
நடந்திட ஆசை ... !
நான் வணங்கும் காட்சியெல்லாம் நீயாக ஆசை ... !
உன் நிழலாக என்றென்றும்
நான் மாற ஆசை ... !
சினம் தவிர்த்த மன நிலையை
நான் அடைய ஆசை ... !
தினம் போற்றும் உன் சிறந்த
பக்தனாக ஆசை ... !
மனம் நினைக்கும் செயல் யாவும்
சிறந்தோங்க ஆசை ... !
அந்த செயலும் பிறர் நன்மைக் கென்றால் அடைவேன் பேராசை ... ! தா னென்ற அகந்தை யெல்லாம்
விட்டொழிக்க ஆசை ... ! உன்
அடியவன் என்ற கர்வம் மட்டும்
நிறைந்திருக்க ஆசை ... !
பசி தாகம் பிணி யெல்லாம்
விட்டொழிக்க ஆசை ... !
தாயு மானவா உன் கரத்தால்
அமிழ்து உண்ண ஆசை ... !
எடுத்த இப் பிறவிக்கு போதும்
இந்த ஆசை ... ! இந்த வரம் தனையே தந்தெனக்கு அருள் புரிவாய் சிவனே ... !
ஓம் நமச் சிவாயவே...
Comments
Post a Comment