Skip to main content

மனம் சுத்தமாக

ஒரு பெரியவர் எப்போது
பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி...,

 "பகவத்கீதை படித்துக்
கொண்டே இருப்பார்".....!!

 இளைஞன் ஒருவன்
பல நாட்களாக....,

 " இதனை கவனித்துக்
கொண்டே இருந்தான்"....!!

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான்....!!

" தாத்தா...!
 "எப்பப் பாத்தாலும்
இந்த புத்தகத்தையே படிச்சிட்டு
இருக்கீங்களே".....,

"இதை எத்தனை
நாளா படிக்கிறீங்க"...? என்றான்.

பெரியவர் சொன்னார்,

" ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் "....!!

அப்படின்னா....,
 " இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே"....!!

"அப்புறம் ஏன்
இன்னும் படிக்கிறிங்க"..... ? என்றான்.

தாத்தா சிரித்தபடி கூறினார்,

" எனக்கு ஒரு உதவி செய்"....!!

"அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான்
பதில் சொல்றேன்".....!!

இளைஞன் கேட்டான்,

" என்ன உதவி தாத்தா.....? "

பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு
மூங்கில் கூடையை எடுத்தார்.

"அதில் அடுப்புக் கரி இருந்தது"......!!

அதை ஒரு மூலையில்
கொட்டினார்....!!

 பல நாட்களாகக் கரியை
சுமந்து , சுமந்து.....,

 " அந்தக் கூடையின்
உட்புறம் கருப்பாக மாறி இருந்தது"........!!

பெரியவர் சொன்னார்,

 தம்பி....,

 "அதோ அங்கே இருக்குற தண்ணீர் பைப்புல இருந்து".....,

 " இந்தக்
கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்" என்றார்...!!

"இளைஞனுக்கு சிரிப்பு வந்தது".....!!

இருந்தாலும் பெரியவர் சொல்லி
விட்டதால்.....,

  எடுத்துச் சென்று
தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.

அவன் வந்து சேருவதற்கு முன்பே
 எல்லா நீரும்........,

"மூங்கில் கூடையின் ஓட்டைகள் வழியே தரையில் ஒழுகிப்போனது".......!!

 பெரியவர் சொன்னார்,

" இன்னும் ஒரே ஒரு முறை " .....,

 இளைஞன்
மீண்டும் முயன்றான்.

ஆனால்,
 " மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்".....?

"மீண்டும் கீழே கொட்டிப் போனது".....!!

 பெரியவர் கேட்டார்,
" இந்த தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு
முறை மட்டும் தண்ணீர் நிரப்பி பாரேன் என்றார்.

இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்.

"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி
செய்து விட்டு"......,

" திரும்பிப் பார்க்காமல்
ஓடிவிடுவோம்"....... !!

"அவர் எந்தப் புத்தகத்தைப்
படித்தால் எனக்கென்ன வந்தது"......?

தண்ணீர் பிடித்தான்.

 வழக்கம் போலவே
எல்லாத் தண்ணீரும் தரையில்.

" தாத்தா,

 "இந்தாங்க உங்க கூடை."....!!

 " இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா"....?

"எதுக்கு என்னை இந்தப்
 பாடு படுத்துறீங்க என்றான்".....!!

அவர் புன்னகையோடு சொன்னார்,

" இதுல தண்ணி நிற்காதுன்னு எனக்கும் தெரியும்"......!!

"நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப்
போகும் போது".......,

 " இதோட உட்புறம் எப்படி இருந்தது? " என்றார்.

இளைஞன் சொன்னான் ,

" ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா
இருந்தது "

"இப்போ பார் "என்றார்.

தண்ணீர் பட்டு , பட்டுக் கரிக்கட்டைகளின் கறுப்பு நிறம் கலைந்து.......,

  "கூடையின்
உட்புறம் சுத்தமாகி இருந்தது".......!!

பெரியவர் சொன்னார்,

" தம்பி,
    நீ கேட்ட கேள்விக்கு பதில்
இதுதான்".......!!

எத்தனை முறை தண்ணீர்
பிடிச்சாலும்.......,
 " மூங்கில் கூடை
நிரம்பவே இல்லை"......!!

ஆனாலும்...,
  " ஒவ்வொரு
முறையும் நீரில் நனைய கூடை சுத்தமாயிடிச்சு".....!!

அது போலத்தான்....?

"எத்தனை முறை படிச்சாலும் முழு பகவத்கீதையும் மனப்பாடம் ஆயிடும்னு
சொல்ல முடியாது"......!!

 "ஆனா படிக்கிற
ஒவ்வொரு முறையும்"......,

 " உள்ளுக்குள்ள
இருக்கும் அழுக்கும்".......,

"கறையும்
சுத்தமாகிக்கிட்டே இருக்கும்" என்றார்......!!

 அந்த வார்த்தைகளின் உண்மை........ ,

அந்த இளைஞனின் மனதில்
ஆழ்ந்து யோசிக்க செய்தது...!!

 இறைநாமம் சொல்ல, சொல்ல...,
"நம் மன அழுக்குகள் அகலும்"...!!

பக்தி காவியங்கள் படிக்க, படிக்க.....,
  "இறை சிந்தனை பெருகும்"....!!

"மனசஞ்சலம் விலகும்".....!!

நம் முன் வினைகள் அகலும்"....!!

Comments

Popular posts from this blog

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்.

சித்தர் பட்டினத்தார் பாடல்... மனிதனாகப் பிறந்தவன் ஏராளமான பிழைகளைச் செய்கிறான். அந்தப் பிழைகளைப் பொறுத்து அருளும் படி ஈசனை வேண்ட வேண்டும். நிலையற்ற காரியங்களே பெரிதென்று எண்ணி அந்த மாயையில் மயங்கிவிடக் கூடாது. இதை ஒரு சிறந்த பாடல் மூலம் மக்களுக்கு உணர்த்துகிறார் பட்டினத்தார்... "கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும் எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே." இறைவனோடு மனிதன் கொள்ளவேண்டிய தொடர்பு பற்றி மிக அழகாக சொல்லி இருக்கிறார் பட்டினத்தார். பட்டினத்தார் சிறந்த சிவபக்தர். "நமசிவாய"என்ற ஐந்தெழுத்தையும் திரும்பத் திரும்ப சொல்வதன் மூலம் இறை உண்மையை உணர முடியும் என்பதையும், பிழைகளை செய்தாலும் நெஞ்சம் கசிந்துருகி இறைவனை வேண்டினால் எல்லாப் பிழைகளையும் பொறுத்து அருள்வான் என்பதையும் இப்பாடலில் உணர்த்துகிறார். பேரின்பப் பெரும் பதவியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டினத்தார் சொல்லுகின்ற முறை தானே அழகாகும். ஆழமான கருத்துக்கள், அழகான ...

உஞ்ச விருத்தி என்பது என்ன?

தலையில் சிவப்பு வஸ்திரம் கட்டியபடி இடது இடுப்பில் செம்பையும் காலில் சலங்கையும் கட்டிக் கொண்டு கிருஷ்ண பஜனை பாடி வீடுவீடாய் சென்று தானம் கேட்பது தான் உஞ்ச விருத்தி. இப்படி வந்தால் கிருஷ்ண பகவானே தானம் கேட்டு வருவ தாக ஒரு ஐதீகம். உஞ்சவிருத்தி எடுப்பவர்களுக்கு பச்சரிசியைத்தான் தானமாக கொடுப்பார்கள். உஞ்ச விருத்தி கேட்பவர்கள் இடுப்பில் இருக்கும் செம்பு நிரம்பிவிட்டால் இருப்பிடம் திரும்பிவிடுவார்கள். அன்றைக்குத் தேவையான தானியத்தை மட்டுமே யாசகமாகப் பெற வேண்டும் என்பது உஞ்சவிருத்தியின் தாத்பரியம். இருபது வயதில் தனது தந்தையின் வழியில் உபன்யாசம் படிக்கப் புறப்பட்ட திருச்சி கல்யாணராமன் கடந்த நாற்பது ஆண்டுகளாக தினமும் உஞ்சவிருத்தி எடுத்து அதன்மூலம் கிடைக்கும் பச்சரிசியைத்தான் சமைத்து உண்கிறார். “ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற மகான்கள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்தார்கள். நான் வெளியூர்களுக்குப் போனால் ஓட்டல்களில் தங்குவதில்லை. முதியோர் இல்லங்கள் தான் நமக்குச் சொர்க்கம். உஞ்சவிருத்தி எடுப்பவர்கள் செம்பு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் தானம் கேட்கக்கூடாது. ஆனால், நான் ஒரு தெருவில் இறங்கினால் இரண்டு மூட...

அரிது அரிது

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது அதனினும் தானமும் தவமும் பெறுதல் அரிது தவம் பெற்றவர்க்கே வானவர் நாடுவழிதிறந்திடுமே." - ஔவை தவமே ஞானத்தைத் தரும். ஞானமே உண்மையான அமைதியைத் தரும். தொடர்ந்த பிறப்பால் சலித்து பிறவாநிலையை மனம் நாடும் போது, அதற்கான உபாயங்களாக நம் சித்தர்களும் ஞானிகளும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நாலு வழிகளைக் காட்டுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் மற்ற மூன்றும் தானே தொடரும். திருஞான சம்பந்தர் சரியை மார்க்கத்தையும், நாவுக்கரசர் கிரியை மார்க்கத்தையும், சுந்தரர் யோக மார்க்கத்தையும், மாணிக்கவாசகர் ஞான மார்க்கத்தையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டி மெய்நிலை அடைந்தார்கள். இந்த சரியையும், கிரியையும் வெளிப்படையானது. யோகமும் ஞானமும் மறை பொருளாக உள்ளது. தியானம் பயில விரும்புபவர்கள் இவைகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சரியை - எந்நேரமும் இறை நம்பிக்கையோடு இருப்பது. பக்தியுடன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வது. புராண, இதிகாசங்கள் படிப்ப...