ஏழைகள், இழிந்தவர்கள், ஆதரவற்ற உறவினர்கள் ஆகியோருக்கு உதவும் ஒருவன்,
பிள்ளைகள், கால்நடைச் செல்வம் ஆகியவற்றை அடைந்து, முடிவிலாத செழிப்பை அனுபவிக்கிறான்.
..
தங்கள் நன்மையை விரும்புபவர்கள், எப்போதும் தங்கள் உறவினர்களுக்கு உதவ வேண்டும்.
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது குலத்தை வளர்க்க முயல்வீராக.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் உமது உறவினர்களிடம் நன்றாக நடந்து கொண்டால், செழிப்பு உமதாகும்.
..
நற்குணங்களற்ற உறவினர்களும் ஒருவனால் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்டு, உமது உதவிகளைப் பணிவுடன் எதிர்நோக்குபவர்களை {பாண்டவர்களை} எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும்?
..
பாண்டுவின் வீர மகன்களுக்கு உதவி செய்வீராக,
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் பராமரிப்பில் சில கிராமங்களைக் கொடுப்பீராக.
இப்படிச் செய்வதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் புகழ் உமதாகும்.
நீர் முதிர்ந்தவராக இருக்கிறீர்; எனவே, உமது மகன்களை நீர் கட்டுப்படுத்த வேண்டும்.
உமக்கு எது நன்மையோ, அதையே நான் சொல்ல வேண்டும்.
நீர் நலமாக இருக்க விரும்புபவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிவீராக.
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தனது நன்மையை விரும்பும் ஒருவன் தனது உறவினர்களுடன் சண்டையிடவே கூடாது.
...
இவ்வுலகில், உறவினர்களே ஒருவனை காக்கிறார்கள். மேலும், உறவினர்களை அழிக்கவும் செய்கிறார்கள். நீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் ஆபத்துகளில் காக்கிறார்கள்;
அதே வேளையில் அநீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் தங்கள் சகோதரர்களை ஆபத்தில் மூழ்கடிக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! மரியாதைகளைக் கொடுப்பவரே, பாண்டுவின் மகன்களிடம் நீதியோடு நடப்பீராக. அவர்களால் சூழப்பட்டிருக்கும் நீர், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவராக இருப்பீர்.
..
கையில் கணைகளுடன் இருக்கும் வேடனைக் கண்ட மான் போல, செழிப்புடன் இருக்கும் ஒரு உறவினரின் முன்னிலையில் மற்றொரு உறவினன் {செழிப்பில்} சுருங்கிப் போனால் {வறுமை நிலை அடைந்தால்},
அந்த வறியவனின் பாவங்கள் அனைத்தையும் செழிப்புடன் இருக்கும் அந்த உறவினனே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.
..
ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே},
தற்போதைய உமது செயல்பாடின்மையால், எதிர்காலத்தில் பாண்டவர்களின் அல்லது உமது மகன்களின் இறப்பைக் கேள்விப்பட்டு, நீரே வருந்த வேண்டியிருக்கும்.
ஓ!, இவை யாவையும் சிந்திப்பீராக. வாழ்வே நிலையற்றதாக இருக்கும்போது,
எந்த செயலின் அல்லது செயலின்மையின் விளைவால் ஒருவன் சோக அறைக்குள் நுழைந்து வருத்தத்தில் ஈடுபட வேண்டிவருமோ, அதை ஆரம்பத்திலேயே அவன் தவிர்த்துவிட வேண்டும்.
..
நீர் குரு வம்சத்தவரில் முதிர்ந்தவராவீர். துரியோதனன், பாண்டு மகன்களுக்கு இத்தீமைகளைச் செய்தால், ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் தடுப்பது உமது கடமையாகும்.
பாண்டவர்களை, மீண்டும் அவர்களது பொறுப்புகளில் அமர்த்தி, இவ்வுலகில் நீர் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு,
ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களைப் போல வழிபடத்தகுந்தவர் ஆவீராக.
..
ஞானிகள் கண்ட விளைவுகள் படி அவர்களால் சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகளை நினைவில் கொண்டு,
எவன் செயலில் ஈடுபடுகிறானோ, அவன் தனது புகழை இழப்பதில்லை.
..
கல்வியும், திறமையும் கொண்ட மனிதர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் கூட ஞானமற்றவையாக அறிவற்றவையாக இருக்கின்றன.
ஏனெனில், சொல்லப்பட்டவையைத் தவறாகப் புரிந்து கொண்டு, பதிய வைக்கப்படுகிறது.
அல்லது, புரிந்து கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் அவை சாதிக்கப்படுவதில்லை.
...
பாவம், துன்பம் ஆகியவற்றை விளைவிக்கும் எக்காரியத்தையும் எப்போதுமே செய்யாத கற்ற மனிதன்,
எப்போதும் செழிப்பில் வளர்கிறான். எனினும், தீய ஆன்மா கொண்ட மனிதன்,
தனது மூடத்தனத்தால், பாவ வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து, சேறு நிரம்பிய ஆழமான பள்ளத்தில் விழுகிறான்.
...
நேராமல் காக்க வேண்டிய ஆறு
..
செய்யப்படும் ஆலோசனைகளைப் பகிரங்கப்படுத்தும் பின்வரும் ஆறு வழிகளை, அறிவுள்ள ஒருவன் எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றியையும், நீண்ட மரபையும் விரும்பும் ஒருவன் இந்த ஆறில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.
{1} மயக்கம் {குடி},
{2} உறக்கம்,
{3} ஒற்றர்களைக் கவனியாமை,
{4} தன் இதயச் செயல்பாட்டைச் சார்ந்து, ஒன்றின் மேல் ஒன்றை வைக்கும் அணுகுமுறை (சிலர்மீது பற்று)
{5} தீய ஆலோசகரிடம் வைக்கப்படும் நம்பிக்கை,
{6} திறமையற்ற தூதர்கள் ஆகியவையே அவை அந்த ஆறும்.
...
ஆலோசனைகள் மறைத்தல்
..
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவன், ஆலோசனைகளைப் பகிரங்கமாக்கும் இந்த ஆறுதுவாரங்களை அறிந்து, அவற்றைத் தவிர்ப்பதால் {செய்யப்படும் ஆலோசனைகளை மறைப்பதால்}, எதிரிகளை அடக்குவதில் வெல்கிறான்.
..
சாத்திரங்கள் எதையும் அறியாமல், பெரியோருக்காகக் காத்திராமல் {பணிவிடை செய்யாமல்} இருக்கும் ஒருவன், பிருஹஸ்பதியின் அறிவையே பெற்றிருந்தாலும், அறத்தையோ, பொருளையோ அறியமாட்டான்.
...
கடலிலிட்ட பொருள் தொலைந்து போகும்; கேட்காதவனிடம் பேசப்படும் வார்த்தைகள் தொலைந்து போகும்; ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காத ஒருவனிடம் சாத்திரங்கள் {சாத்திர அறிவு} தொலைந்து போகும்;
அணைந்த நெருப்பால் விடப்பட்ட சாம்பலில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யும் தொலைந்து போகும்.
..
புத்திசாலி ஒருவன், தனது புத்தியைப் பயன்படுத்தியும்,
தனது காதுகள், கண்கள் மூலம் கேட்டும், தானே பார்த்தும்.
ஒரு தீர்மானத்தை எட்டி அறிவாளிகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
..
1.அடக்கம்- காதுகள் கேட்கும் அவதூறையும்;
2.ஆற்றல்- தோல்வியையும் அகற்றும்.
3.மன்னிக்கும் தன்மை-கோபத்தை வெல்லும்.
4.மங்களச் சடங்குகள் - தீய அறிகுறிகள் அனைத்தையும் அழிக்கும்.
..
ஒருவனது குலம், ஓ! மன்னா {திருதராஷ்டரரே},
இன்பத்தைக் கொடுக்கும் பொருள், பிறந்த இடம், வீடு, நடத்தை, உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு சோதிக்கப்படுகிறது
..
இன்பத்தைக் கொடுக்கும் பொருள் கிடைக்கும்போது,
துறவை அடைந்த ஒருவன் கூட, அதை அனுபவிக்க விரும்பாமல் இருப்பதில்லை ,அதை அனுபவிக்கவே விரும்புகிறான்.
அப்படியிருக்கும்போது, ஆசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனைக் குறித்து என்ன சொல்ல முடியும்?
பிள்ளைகள், கால்நடைச் செல்வம் ஆகியவற்றை அடைந்து, முடிவிலாத செழிப்பை அனுபவிக்கிறான்.
..
தங்கள் நன்மையை விரும்புபவர்கள், எப்போதும் தங்கள் உறவினர்களுக்கு உதவ வேண்டும்.
எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது குலத்தை வளர்க்க முயல்வீராக.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் உமது உறவினர்களிடம் நன்றாக நடந்து கொண்டால், செழிப்பு உமதாகும்.
..
நற்குணங்களற்ற உறவினர்களும் ஒருவனால் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்து அறங்களையும் கொண்டு, உமது உதவிகளைப் பணிவுடன் எதிர்நோக்குபவர்களை {பாண்டவர்களை} எந்த அளவுக்குப் பாதுகாக்க வேண்டும்?
..
பாண்டுவின் வீர மகன்களுக்கு உதவி செய்வீராக,
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களின் பராமரிப்பில் சில கிராமங்களைக் கொடுப்பீராக.
இப்படிச் செய்வதால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் புகழ் உமதாகும்.
நீர் முதிர்ந்தவராக இருக்கிறீர்; எனவே, உமது மகன்களை நீர் கட்டுப்படுத்த வேண்டும்.
உமக்கு எது நன்மையோ, அதையே நான் சொல்ல வேண்டும்.
நீர் நலமாக இருக்க விரும்புபவர்களில் நானும் ஒருவன் என்பதை அறிவீராக.
ஓ! அய்யா {திருதராஷ்டிரரே}, தனது நன்மையை விரும்பும் ஒருவன் தனது உறவினர்களுடன் சண்டையிடவே கூடாது.
...
இவ்வுலகில், உறவினர்களே ஒருவனை காக்கிறார்கள். மேலும், உறவினர்களை அழிக்கவும் செய்கிறார்கள். நீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் ஆபத்துகளில் காக்கிறார்கள்;
அதே வேளையில் அநீதிமிக்கவர்கள் மத்தியில் இருப்பவர்கள் தங்கள் சகோதரர்களை ஆபத்தில் மூழ்கடிக்கிறார்கள்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! மரியாதைகளைக் கொடுப்பவரே, பாண்டுவின் மகன்களிடம் நீதியோடு நடப்பீராக. அவர்களால் சூழப்பட்டிருக்கும் நீர், எதிரிகளால் வெல்லப்பட முடியாதவராக இருப்பீர்.
..
கையில் கணைகளுடன் இருக்கும் வேடனைக் கண்ட மான் போல, செழிப்புடன் இருக்கும் ஒரு உறவினரின் முன்னிலையில் மற்றொரு உறவினன் {செழிப்பில்} சுருங்கிப் போனால் {வறுமை நிலை அடைந்தால்},
அந்த வறியவனின் பாவங்கள் அனைத்தையும் செழிப்புடன் இருக்கும் அந்த உறவினனே ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.
..
ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே},
தற்போதைய உமது செயல்பாடின்மையால், எதிர்காலத்தில் பாண்டவர்களின் அல்லது உமது மகன்களின் இறப்பைக் கேள்விப்பட்டு, நீரே வருந்த வேண்டியிருக்கும்.
ஓ!, இவை யாவையும் சிந்திப்பீராக. வாழ்வே நிலையற்றதாக இருக்கும்போது,
எந்த செயலின் அல்லது செயலின்மையின் விளைவால் ஒருவன் சோக அறைக்குள் நுழைந்து வருத்தத்தில் ஈடுபட வேண்டிவருமோ, அதை ஆரம்பத்திலேயே அவன் தவிர்த்துவிட வேண்டும்.
..
நீர் குரு வம்சத்தவரில் முதிர்ந்தவராவீர். துரியோதனன், பாண்டு மகன்களுக்கு இத்தீமைகளைச் செய்தால், ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் தடுப்பது உமது கடமையாகும்.
பாண்டவர்களை, மீண்டும் அவர்களது பொறுப்புகளில் அமர்த்தி, இவ்வுலகில் நீர் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு,
ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களைப் போல வழிபடத்தகுந்தவர் ஆவீராக.
..
ஞானிகள் கண்ட விளைவுகள் படி அவர்களால் சொல்லப்பட்ட நல்ல வார்த்தைகளை நினைவில் கொண்டு,
எவன் செயலில் ஈடுபடுகிறானோ, அவன் தனது புகழை இழப்பதில்லை.
..
கல்வியும், திறமையும் கொண்ட மனிதர்களால் சொல்லப்படும் வார்த்தைகள் கூட ஞானமற்றவையாக அறிவற்றவையாக இருக்கின்றன.
ஏனெனில், சொல்லப்பட்டவையைத் தவறாகப் புரிந்து கொண்டு, பதிய வைக்கப்படுகிறது.
அல்லது, புரிந்து கொள்ளப்பட்டாலும், நடைமுறையில் அவை சாதிக்கப்படுவதில்லை.
...
பாவம், துன்பம் ஆகியவற்றை விளைவிக்கும் எக்காரியத்தையும் எப்போதுமே செய்யாத கற்ற மனிதன்,
எப்போதும் செழிப்பில் வளர்கிறான். எனினும், தீய ஆன்மா கொண்ட மனிதன்,
தனது மூடத்தனத்தால், பாவ வழியில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்து, சேறு நிரம்பிய ஆழமான பள்ளத்தில் விழுகிறான்.
...
நேராமல் காக்க வேண்டிய ஆறு
..
செய்யப்படும் ஆலோசனைகளைப் பகிரங்கப்படுத்தும் பின்வரும் ஆறு வழிகளை, அறிவுள்ள ஒருவன் எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றியையும், நீண்ட மரபையும் விரும்பும் ஒருவன் இந்த ஆறில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.
{1} மயக்கம் {குடி},
{2} உறக்கம்,
{3} ஒற்றர்களைக் கவனியாமை,
{4} தன் இதயச் செயல்பாட்டைச் சார்ந்து, ஒன்றின் மேல் ஒன்றை வைக்கும் அணுகுமுறை (சிலர்மீது பற்று)
{5} தீய ஆலோசகரிடம் வைக்கப்படும் நம்பிக்கை,
{6} திறமையற்ற தூதர்கள் ஆகியவையே அவை அந்த ஆறும்.
...
ஆலோசனைகள் மறைத்தல்
..
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடைவதில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் ஒருவன், ஆலோசனைகளைப் பகிரங்கமாக்கும் இந்த ஆறுதுவாரங்களை அறிந்து, அவற்றைத் தவிர்ப்பதால் {செய்யப்படும் ஆலோசனைகளை மறைப்பதால்}, எதிரிகளை அடக்குவதில் வெல்கிறான்.
..
சாத்திரங்கள் எதையும் அறியாமல், பெரியோருக்காகக் காத்திராமல் {பணிவிடை செய்யாமல்} இருக்கும் ஒருவன், பிருஹஸ்பதியின் அறிவையே பெற்றிருந்தாலும், அறத்தையோ, பொருளையோ அறியமாட்டான்.
...
கடலிலிட்ட பொருள் தொலைந்து போகும்; கேட்காதவனிடம் பேசப்படும் வார்த்தைகள் தொலைந்து போகும்; ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காத ஒருவனிடம் சாத்திரங்கள் {சாத்திர அறிவு} தொலைந்து போகும்;
அணைந்த நெருப்பால் விடப்பட்ட சாம்பலில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யும் தொலைந்து போகும்.
..
புத்திசாலி ஒருவன், தனது புத்தியைப் பயன்படுத்தியும்,
தனது காதுகள், கண்கள் மூலம் கேட்டும், தானே பார்த்தும்.
ஒரு தீர்மானத்தை எட்டி அறிவாளிகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
..
1.அடக்கம்- காதுகள் கேட்கும் அவதூறையும்;
2.ஆற்றல்- தோல்வியையும் அகற்றும்.
3.மன்னிக்கும் தன்மை-கோபத்தை வெல்லும்.
4.மங்களச் சடங்குகள் - தீய அறிகுறிகள் அனைத்தையும் அழிக்கும்.
..
ஒருவனது குலம், ஓ! மன்னா {திருதராஷ்டரரே},
இன்பத்தைக் கொடுக்கும் பொருள், பிறந்த இடம், வீடு, நடத்தை, உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு சோதிக்கப்படுகிறது
..
இன்பத்தைக் கொடுக்கும் பொருள் கிடைக்கும்போது,
துறவை அடைந்த ஒருவன் கூட, அதை அனுபவிக்க விரும்பாமல் இருப்பதில்லை ,அதை அனுபவிக்கவே விரும்புகிறான்.
அப்படியிருக்கும்போது, ஆசைகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனைக் குறித்து என்ன சொல்ல முடியும்?
Comments
Post a Comment